ஈரோடு, செப். 23- இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி சலவைத் தொழிலா ளர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டத்தில் 2 ஆயிரத் திற்கும் மேற்பட்ட சலவை தொழி லாளர்கள் உள்ளனர். இந்த சலவை யாளர்களுக்கு அரசு உதவிகள் எதுவும் கிடைப்பதில்லை. குறிப்பாக பல சலவைத் தொழிலாளர் குடும்பங்கள் வீட்டுமனை இல்லாமல் சிரமப்பட்டு வருகிறார்கள். அந்த குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். சலவைத் தொழிலாளர் களுக்கு நலவாரிய அட்டை வழங்க வேண்டும். 500 க்கும் மேற்பட்ட சலைவைத் தொழிலாளர்கள் உள்ள பெருந்துறை, அந்தியூர் போன்ற பகுதி களில் சலவைத்துறை அமைத்துக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சலவை தொழிலாளர் மத் திய சங்கத்தின் சார்பில் திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக் கப்பட்டது. இந்த மனுவினை அளிக்கையில் சங்கத்தின் மாவட்ட தலைவர் பால் ராஜ், மாவட்ட செயலாளர் தங்க வேலு, மாவட்ட பொருளாளர் தங்க ராஜ் தலைமையில் ஏராளமான சலவை தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தனர்.