tamilnadu

அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஒதுக்கப்படும் நிதியில் பாரபட்சம் திமுக, சிபிஎம் கண்டனம்

ஈரோடு, மே 31- அந்தியூர் ஒன்றியத்தில் பொதுமக்க ளுக்கான அடிப்படை வசதிகள் மேற் கொள்ள நிதி ஒதுக்குவதில் ஆளும்கட்சி யினர் பாரபட்சமாக நடந்து கொள்வதாக திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்தில் 16 ஒன்றிய கவுன்சில் வார்டு கள் உள்ளன. இங்கு வசிக்கும் அனைத்து வார்டுகளுக்கும் குடிநீர், பொது சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்திட ரூ.1 கோடியே 32 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. இந்நிலையில், அதிகாரத்தில் உள்ள ஆளும் கட்சியினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியைச் சார்ந்த  9 ஒன்றிய வார்டுகளுக்கு ரூ.1 கோடியே 11 லட்சமும், திமுக மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளின் 7 கவுன்சிலர்க ளின் வார்டுகளுக்கும்  தலா ரூ.3 லட்சம் என்ற அடிப்படையில் மொத்தம் ரூ.21 லட்சம் அளவிற்கு மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ள னர். இந்த நடவடிக்கை அரசியல் காழ்ப்பு ணர்ச்சியுடன் எதிர்க்கட்சி கவுன்சிலர் வார்டு களில் உள்ள பொதுமக்களை புறக்கணிக் கக்கூடிய பாரபட்சமான நடவடிக்கையா கும். இதனை கண்டித்து திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் அந்தியூர் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் மனு அளித்தனர்.  மேலும், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 16 ஒன்றிய வார்டுகளுக்கும் சம மாக நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுத்திட வேண்டுமென திமுக மற்றும் சிபிஎம் கவுன்சிலர்கள் வலியுறுத்தியுள்ள னர்.

;