tamilnadu

img

கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கோபி, ஜன. 16- மாட்டுப்பொங்கலையொட்டி கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை அருவிக்கு பல்லாயிரக்கணக்கான சுற்றுலாபயணிகள் குவிந்தனர்.  ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையத்தில் உள்ள கொடி வேரி தடுப்பணை 600 ஆண்டு களுக்கு முன்பு கருங்கல்லால் அருவி போல் தண்ணீர் கொட்டும் நிலையில் கட்டப்பட்டுள்ளது. பவானி சாகர் அணையிலிருந்து பவானிஆற்றில் வரும் தண்ணீர் கொடிவேரி தடுப்பணைக்கு வந்து  அருவியாக விழும். இந்த தடுப் பணை அருவிக்கு விடுமுறை நாட் களிலும், பண்டிகை தினங்களிலும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இந்நிலை யில், தமிழர்களின் முக்கிய பண்டிகையாக அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை அடுத்து வரும் மாட்டுப் பொங்கல் தின மான வியாழனன்று கொடிவேரி தடுப்பணை அருவிக்கு கோவை,  திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர்,  சேலம் போன்ற பல்வேறு மாவட்டங் களிலிருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்தனர். இங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஆயில் மஜாஜ் செய்து அருவியில் குளித்து அங்கு சுடச்சுட விற்கப்படும் ஆற்று மீனை சாப்பிட்டு, பூங்காவில் குழந்தைகளுடன் விளையாடி, பரிசல் பயணம் மேற்கொண்டு மகிழ்ந்தனர்.  மேலும் ஏழைகளின் குற்றால மாகக் கருத்தப்படும் கொடிவேரி அணையில் கடற்கரைபோல் மணல் குவிந்துள்ளதால், கடல் பகுதிக்குச் செல்லும் வாய்ப்பில்லாதவர்கள் அதன் அனுபவத்தைக் கொடிவேரி யிலேயே மணல்களில் விளையாடி ஆனந்தப்பட்டனர். குற்றாலத்தில் கொட்டும் தண்ணீர் போல் இங்கும்  அருவியில் குளித்து மகிழ்ந்த தாகவும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்.  பொதுப்பணித்துறையினர் குடிநீர், பெண்கள் உடை மாற்றும்  அறை போன்ற அடிப்படை வசதி களை மேம்படுத்தியிருந்தனர். ஆனால் கடத்தூர் காவல்துறையின்  சார்பில் பாதுகாப்புப் பணிக்கு  காவலர்கள் நியமிக்கப்படாததி னால் சுற்றுலாப் பயணிகள் கடும்  இன்னலுக்கு ஆளாகினர். கொடி வேரி அணைக்குச் செல்ல சத்திய மங்கலம் சாலையிலிருந்து 3  கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டி யுள்ளதால் கொடிவேரி அணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மினி வேன் உள்ளிட்ட நான்கு மற்றும் இரு சக்கர வாகனங்களில் அதிகளவு  வந்திருந்ததால் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. வாக னங்கள் நிறுத்துவதற்கு இட மின்றியும், உள்ளே செல்ல முடியா மலும், வெளியேற முடியாமலும் அவதியடைந்தனர். இவ்வாறு கடந்தூர் காவல்துறையின் சார்பில் போதுமான காவலர்கள் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்படாத காரணத் தினால் கடும் இன்னலுக்கு உள் ளானதாக சுற்றுலா பயணிகள் வேதனை தெரிவித்தனர்.