tamilnadu

மது விற்ற 5 பேர் கைது

 ஈரோடு, ஏப்.14-ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், கடத்தூர் காவல்துறையினர் சனியன்று காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காசிபாளையத்தில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்ற மணியகாரன்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் (எ) சுப்பிரமணி (47) என்பவரை கைது செய்தனர். இவரிடமிருந்து 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் காசிபாளையம் சந்தைக்கடை பகுதியில் மது பானங்கள் விற்ற அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் (29) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இவரிடமிருந்து 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.தாளவாடி அருகே பனஹள்ளி குட்டை பகுதியில் கர்நாடகா மாநில மது பானங்களை பதுக்கி வைத்து விற்ற பனஹள்ளியை சேர்ந்த மாதேஸ் (42) என்பவரை கைது செய்து, இவரிடமிருந்து 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். திங்களூர் காவல்துறையினர் நிச்சாம்பாளையம் பகுதியில் மது பானங்கள் விற்ற கவுந்தப்பாடியை சேர்ந்த மாரிச்சாமி (42) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மாவட்டம் முழுவதும் நடந்த ரோந்து பணியில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்றது தொடர்பாக 4 பேரை காவல்துறையினர் கைது உள்ளனர்.  

;