அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனம் பாதிக்கப்பட்ட மாணவிகள் ஆட்சியரிடம் புகார்
ஈரோடு, செப். 23- அங்கீகாரம் இல்லாமல் மாணவிகளிடம் ஆயிரக்கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றி வரும் போலி கல்வி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட மாணவிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித் தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இன்டர் நேசனல் மாண்டிசோரி டீச்சர் டிரைனிங் இன்ஸ்டியூட் செயல்பட்டு வருகிறது. இக் கல்வி நிறுவனத்தின் கிளை ஈரோட்டில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் சேர்க்கைக்காக ஒரு மாணவிக்கு ரூ.25 ஆயிரம் என கட்டணம் வசூலிக்கப்பட் டுள்ளது. இந்நிலையில் இக்கல்வி நிறுவனம் ஈரோட்டில் செயல்படுவதற்கான அங்கீ காரத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு புதுப் பிக்காமல் இருந்து வந்ததால், தற்போது அங்கு பயின்ற வந்த மாணவிகளால் மேற் கொண்டு படிக்க முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்வி நிர்வாகத்தினரிடம் கேட்கையில், உரிய பதிலளிக்காததுடன், மாணவிகள் செலுத்திய கல்வி கட்டணத் தையும் திரும்ப வழங்க மறுத்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் திங்களன்று மாவட்ட ஆட்சியர் கதிரவனி டம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், மேற்குறிப்பிட்ட கல்வி நிறுவனம் 2015ம் ஆண்டு முதல் எவ்வித அங்கீகாரமும் இல்லாமல் ஏராளமானோரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு திட்டமிட்டு ஏமாற்றி வந்திருப்பதாகவும் கூறியிருந்தனர். இம் மனுவினை பெற்றக்கொண்ட ஆட்சியர், இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தர விட்டுள்ளார்.
ஊதிய முரண்பாட்டை களையக்கோரி தூய்மை காவலர்கள் மனு
ஈரோடு, செப். 23-ஊதிய முரண்பாட்டை களைந்து, அரசு நகர்ப்புற துப்புரவு தொழிலாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி கிராம பஞ்சாயத்துகளில் பணியாற்றும் தூய்மை காவலர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் உள்ள 225 கிராம ஊராட்சிகளில் 1,960 தூய்மை காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால், இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு தினக்கூலியாக ரூ.86 மட்டுமே அடிப்படை ஊதியமாக வழங்கப்படுகிறது. அதேநேரம், மாநகராட்சி, நகராட்சிகளில் பணிபுரிவோருக்கு இதனை காட்டிலும் கூடுதலாக ஊதியம் வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த ஊதிய முரண்பாட்டை களைந்து, அரசு நகர்ப்புற துப்புரவு தொழிலாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஊதியத்தை மூன்று அல்லது நான்கு மாதங் களுக்கு ஒரு முறையே வழங்குகின்றனர். ஆகவே, முறை யாக மாதம்தோறும் பத்தாம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை எங்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும். அனைத்து தூய்மை காவலர்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கிராமப்புற தூய்மைக் காவலர்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியர் சி.கதிரவ னிடம் மனு அளித்தனர்.