தேசிய நூலக வாரவிழா கொண்டாட்டம்
ஈரோடு, நவ.24- 52 ஆவது தேசிய நூலக வாரவிழா புன்செய் புளியம் பட்டி கிளை நூலகத்தில் நடைபெற்றது. நாடு முழுவதும் நவம்பர் 16 முதல் 20 ஆம் தேதி வரை தேசிய நூலக வார விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு புன்செய் புளியம்பட்டி கிளை நூல கத்தில் நடைபெற்ற விழா வுக்கு வாசகர் வட்ட தலை வர் கனகராஜ் தலைமை தாங்கினார். கிளை நூலகர் ஜனார்த்தனன் வரவேற் றார். கணேசமூர்த்தி, இளங் கோவன், விடியல் ஜெய காந்தன் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினார்கள். ஈரோடு மாவட்ட மைய நூலக அலுவலர் மாதேஸ் வரன் சிறப்புரையற்றினார். இதைத்தொடர்ந்து பல் வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவி யர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில் நேரு நகர், வெங்கநாயகன் பாளையம், நீலிபாளையம், தபோவனம் மாமகரிஷி ஈஸ் வராய குருகுலம் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய பெரு மக்கள், மாணவ, மாணவி யர்கள் உள்ளிட்ட ஏராள மானோர் பங்கேற்றார்கள். நிறைவில் நூலக பணி யாளர் கருப்பையா நன்றி கூறினார்.
தரமான விதைப் பயன்படுத்த வேண்டுகோள்
தருமபுரி, நவ. 24- நிலக்கடலை, ராகி சாகு படிக்கு தரமான விதைப் பயன்படுத்துமாறு விதை பரிசோதனை அலுவலர் டி.ரவி வேண்டுகோள் விடுத் துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் பருவ மழைக்கு பரவலாக பெய்துள்ள நிலையில் நிலக் கடலை, ராகி, நெல் மற்றும் கொண்டைகடலை விதைப்பு பணி நடைபெற்று வருகிறது. விதையின் தரத்தினை அறிந்திட ஆய்வு செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின் புறம் உள்ள விதை ஆய்வு நிலையத்தில் ரூ.30 செலுத்தி விதையின் தர மறிந்து சாகுபடி செய்திட தருமபுரி, விதை பரிசோ தனை அலுவலர் டி.ரவி தெரி வித்துள்ளார்.
மாற்றுத்திறனாளி மாணவன் தற்கொலை முயற்சி விடுதியில் கொடுமை நடந்ததாக புகார்
கோவை. நவ. 24- விடுதியில் தங்கிப பயின்ற மாற்றுத்திறனாளி மாணவன் துன்புறுத்தப்பட்டதால் தற்கொலைக்கு முயன்றதாக பெற் றோர்கள் புகார் அளித்தனர். பொள்ளாச்சி, கோட்டூர், மலையாண்டிபட்டினம், திரு வள்ளுவர் காலனி பகுதியில் வசிப்பவர் ராஜன். இவருடைய மனைவி கலாமணி. விவசாயக் கூலி தொழிலாளர்களான இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இரண்டாவது மகன் பிரபு (16), இவர் அவிநாசி பகுதியில் உள்ள தெக்கலூர் காது கேளாதோர் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அங்குள்ள விடுதியில் தங்கி பயின்று வந்த நிலையில், பள்ளி நிர்வாகத்திடம் இருந்து பெற்றோருக்கு செல்போன் மூல மாக அழைப்பு வந்தது. அதில் பிரபு வயிற்று வலி காரண மாக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருப்பதாகவும், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் பெற்றோர் கோவை அரசு மருத்துவ மனைக்குச் சென்று மகனைப் பார்த்தனர். அப்பொழுது கழுத்து நெறிக்கப்பட்டதற்கான தடம் இருப்ப தாகவும், உடலில் காயங்கள் இருப்பதாகவும், தனது மகனை ஹாஸ்டலில் உள்ளவர்கள் அடித்து துன்புறுத்தி உள்ளனர் என்றும் தெரிவித்தனர். மேலும், அவருக்கு வயிற்று வலி எதுவும் கிடையாது என பெற்றோர்கள் கூறினர். எனவே விடுதியில் என் மகனை துன்புறுத்தி யவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீருடன் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.