tamilnadu

கோபியில் துணிகடை ஊழியருக்கு கொரோனா கடை ஊழியர்கள், பொதுமக்களுக்கு பரிசோதனை

கோபி, ஜுன் 30 - கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள துணிகடையில் வேலைசெய்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, கடை ஊழியர்கள் 100க்கும் மேற்பட்ட வர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் பேருந்துநிலையம் அருகே செயல் பட்டு வரும் துணிகடையில் சுமார் 100 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த கடையில் மேட்டு வலுவு கமலாரைஸ் மில் வீதியைச் சேர்ந்த  45 வயதுடைய பெண் ஒருவர் வேலை செய்து வந்தார். இவரது வீட்டிற்கு கோவை யிலிருந்து உறவினர்கள் நான்கு பேர் கடந்த சில நாட்களுக்கு முன் வந்துள்ளனர்.  இந்நிலையில் திங்களன்று அந்த பெ ண்ணிற்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதி செய்யப் பட்டது.

 இதையடுத்து துணிகடைக்கு வந்த சுகாதாரத்துறையினர் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரி சோதனை செய்யப்பட்டு அவர் அவர் வீடு களில் தனிமைப்படுத்தமாறு அறிவுறுத் தப்பட்டனர். மேலும், துணிகடையையும் மூடி சீல் வைத்தனர்.  மேலும் இப்பெண்மணி குடி யிருக்கும் கமலா ரைஸ்மில் வீதியும் முழுவதுமாக அடைக்கப்பட்டு, அங்கு வசிக்கும் 25 குடும்பங்களையும் தனிமைப் படுத்தி வருவாய்துறை மற்றும் காவல் துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடு பட்டுள்ளனர்.  கோபிசெட்டிபாளையத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா தொற்று இல்லாத நிலையில் நகரின் முக்கியப் பகுதி யான பேருந்து நிலையம் மற்றும் மேட்டு வலுவு பகுதியில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாலும், அந்த துணிகடையில் நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட வாடிக்கை யாளர்கள் வந்து செல்வதால், பொது மக்களும், வாடிக்கையாளர்களும் அச்ச மடைந்துள்ளனர்.