tamilnadu

img

தோழர் டி.பி.முத்துசாமியின் நினைவு தினம் அனுசரிப்பு

ஈரோடு, மார்ச் 10- ஈரோட்டில், தோழர் டி.பி.முத்துசாமியின் 30வது நினைவு தினம் செவ்வாயன்று அனுசரிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், மூலப்பாளையம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் தோழர் டி.பி.முத்துசாமி அவர்களின் 30ஆவது நினைவு தினம் செவ்வாயன்று அனுசரிக்கப்பட்டது. இதில், டிபிஎம் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.  முன்னதாக, கொடியேற்றத்துடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்விற்கு கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.துரைராஜ் தலைமை வகித்தார். கட்சியின் கொடியை மாவட்டக் குழு உறுப்பினர் லலிதா ஏற்றிவைத்தார். டிபிஎம் நினைவுகள் குறித்து விஜயராகவன் உரையாற்றினார். இந்த நிகழ்வில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ப.மாரி முத்து, மாவட்டக்குழு உறுப்பினர் முத்து மற்றும் இடைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். நிகழ்வின் இறுதியில் ஈரோடு தாலுகா செயலாளர் எம்.நாச்சிமுத்து நன்றி கூறினார்.

;