tamilnadu

விலையில்லா கோழிக்  குஞ்சுகள் வழங்கும் திட்ட பயனாளிகள் தேர்வு

 ஈரோடு, செப்.17- ஈரோட்டில் நடப்பாண்டில் விலையில்லா அசில் இன நாட்டுக் கோழிக் குஞ்சுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 16,650 பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளர். இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, விலையில்லா அசில் இன நாட்டுக் கோழிக்குஞ்சுகள் வழங்கும் திட்டம் 2018-19 ஆம் ஆண்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 2,800 கிராமப்புற பெண்களுக்கு இத்திட்டத்தில் கோழிகள் வழங்கியதன் மூலம் அவர் களுக்கு தொடர்ந்து வருமானத்தைப் பெருக்க வழிவகை செய்யப்பட்டது. தற்போது 2019-20 ஆம் ஆண்டில் இத்திட்டமானது பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் இத்திட்டத்தின் மூலமாக வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் 16,650 பெண் கள் (14 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றியத்திற்கு 250 பெண்கள் வீதம் 3,500 பயனாளிகள் மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் 13,150 பயனாளிகள்) தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு கோழிவளர்ப்பு பற்றிய 1 நாள் பயிற்சி அளிக் கப்பட்டு அவர்களுக்கு தலா 25 அசில் இன நாட்டுக் கோழிகள் 100 சதவிகித மானியத்தில் வழங்கப்பட உள்ளது. தகுதியான, ஆர்வமுள்ள மகளிர் அருகிலுள்ள காக் நடை பெருமருத்துவமனை, பிரதம மருத்துவர், கால்நடை மருத்துவமனை கால்நடை மருத்துவர், கால்நடை மருந் தக, கால்நடை உதவி மருத்துவரிடம் ஒரு வார காலத் திற்குள் விண்ணப்பிக்குமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.