ஈரோடு, ஜூன் 20- தமிழக அரசின் 24 மணி நேரமும் கடைகள் செயல்படும் என்ற அறி விப்பால் கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே பயன் பெறும். சிறிய கடை கள் அழிந்து போகும் அபாயம் உள்ள தாக என ஏஐடியுசி தேசிய செயலாளர் டி.எம்.மூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார். ஈரோட்டில் ஏஐடியுசி சுமைப் பணி தொழிலாளர் சம்மேளன மாநில அமைப்பு கூட்டம் மாநில செயலா ளர் எஸ்.சின்னசாமி தலைமையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட ஏஐடியுசி தேசிய செயலாளர் டி.எம்.மூர்த்தி கூறுகையில், மத்திய அரசு 44 தொழிலாளர் நலச்சட்டங்களை, நான்கு சட்டங்களாக குறைத்துள் ளனர். இனி பணிக்கொடை, இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்டசமூக பாதுகாப்பு தொழிலாளர்களுக்குக் கிடைக்காது என்ற நிலை ஏற்படும்.நிரந்தர வேலை, குறிப்பிட்ட சம்பளம் என்பதும் இருக்காது. தமிழக அரசும், துப்புரவு தொழி லாளர், டேங்க் ஆப்ரேட்டர் உள்ளிட்ட கூலி தொழிலாளர்களின் சம்பளத்தை தொடர்ந்து குறைத்து வருகிறது. ஒன்றரை ஆண்டுக்கு முன், துப்புரவு பணியாளர்களுக்கு, 12ஆயிரம் ரூபாய் முதல், 16ஆயிரம் ரூபாய் என அறிவித்த சம்பளத்தை, தற்போது மறுபரி சீலனை செய்து குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதுபோல, மருத் துவமனை பணியாளர்களுக்கும் சம் பளத்தை மறுமதிப்பீடு செய்து, குறைத்து வழங்குவதாக அறிவித் துள்ளது. தற்போது, சுமைப்பணியாளர்கள் 100 முதல், 120 கிலோ மூட்டை களைக்கூட தூக்கி வருகின்றனர். சர்வதேச அறிவுறுத்தல்படி, 55 கிலோ எடைக்கு மேல் மூட்டை உள்ளிட்ட எந்த பொருட்களுக்குமான எடையை வைக்கக்கூடாது என அறிவித்துள்ளது என அவர் சுட்டிக் காட்டினார்.