கோபியில் பெரியார் திடல் அருகில் சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.7 ஆயிரம் பணத்தை அப்பகுதியில் செருப்புதைக்கும் தொழிலாளியான சாமிநாதபுரத்தைச் சேர்ந்த ராஜாமணி (51) என்பவர் கோபி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரை காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டி கௌர வித்தனர்.