tamilnadu

img

காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு!

ஈரோடு மாவட்டம் கொடுமுடி காசிபாளையம் காவிரி ஆற்றில் கோயிலுக்கு தீர்த்தம் எடுக்க சென்ற 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி காசிபாளையம் காவிரி ஆற்றில், கொத்தளம் புதூர் மதுரை கோவிலுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக சென்ற போது மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அப்பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் (18), சௌத்ரி (14) மற்றும் குப்புராஜ் (17) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஒரு சிறுமியின் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. மற்ற இருவரின் உடலையும் தேடும் பணியில் தீயணைப்பு துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.