tamilnadu

மது விற்ற 2 பேர் கைது

 ஈரோடு, ஜன. 4- ஈரோடு மாவட்டம் காஞ் சிக்கோவில், புலவர்பா ளையம் பிரிவு அருகே சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காஞ்சிக்கோவில் காவல் துறையினர் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று அங்கு மது விற்பனையில் ஈடுபட்டிருந்த காஞ்சிக் கோவில் கிழக்கு ரத வீதியை சேர்ந்த குருசாமி (35) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.  இதேபோல், மலையம் பாளையம் சுடுகாடு அருகில் மது விற்பனையில் ஈடுபட்ட ராயர்பாளையத்தை சேர்ந்த கருப்புசாமி (47) என்பவரை வரப்பாளையம் காவல் துறையினர் கைது செய்து, 7 மது மதுபாட்டில்களை பறி முதல் செய்தனர்.

;