இலங்கையில் இன்று பிற்பகலில் மேலும் 2 இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன.
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது, 6 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன.
இந்த பதட்டம் அடங்குவதற்குள் பிற்பகலில் மேலும் இரண்டு குண்டுகள் வெடித்துள்ளன. இலங்கையில் தெஹிவளை என்ற இடத்தில் உள்ள ஹோட்டலில் மற்றும் தெமட்டகொடாவில் குடியிருப்பு பகுதியிலும் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் செல்கிறது. 160 பேர் உயிரிழந்துள்ளனர்,
தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து ஊரடங்கு உத்தரவும் அமல் படுத்தப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது. சோசியல் மீடியாக்களின் பயன்பாட்டிற்கு தடையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.