tamilnadu

img

தீபாவளி பண்டிகைக்கு 20 சதவிகித போனஸ் வழங்கக்கோரி விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம்

தீபாவளி பண்டிகைக்கு 20 சதவிகித போனஸ் வழங்கக்கோரி பள்ளிபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்தாண்டை காட்டிலும் குறைவாகவே போனஸ் வழங்கப்படும் என விசைத்தறி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதனை கண்டித்து பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் வெள்ளியன்று சிஐடியு நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய துணைத் தலைவர் கே.குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணைத் தலைவர் எஸ். சுப்பிரமணியன்,  மாவட்டத் தலைவர் கே.மோகன், மாவட்ட செயலாளர் எம்.அசோகன், ஒன்றிய செயலாளர் எஸ்.முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;