அரகநாடு சுதாகரன்
குமரி மாவட்டம் அரகநாடு பகுதியில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடிய 1989 காலகட்டத்தில், அப்பகுதியில் இயங்கி வந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தோளோடு தோள் நின்றது. தொழிலாளர்களை மிரட்ட முதலாளிகளுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பயன்பட்டனர். தத்துவார்த்த ரீதியிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு எதிராக செயல்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னணித் தலைவர்களை ஆர்.எஸ்.எஸ். குறி வைத்தது. அவ்வகையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைவர்களுள் ஒருவராகத் திகழ்ந்த தோழர் அரகநாடு சுதாகரனைக் குறி வைத்தது ஆர்.எஸ்.எஸ்.
தொழிலாளர்களின் உரிமைப் போராட்டங்களை ஆதரித்தமைக்காகவும் முதலாளிகளுக்கு ஆதரவாக நின்ற ஆர்.எஸ்.எஸ்ஸை அம்பலப்படுத்தியமைக்காகவும் 1989 மார்ச் 12 அன்று தோழர் அரகநாடு சுதாகரன் ஆர்.எஸ்.எஸ். கயவர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.