tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : மறைமலை அடிகள் நினைவு நாள்....

மறைமலையடிகள் 1876ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் நாள் பிறந்தார்.மறைமலை அடிகள் புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர். சிறப்பாக தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர். பரிதிமாற் கலைஞரும் மறைமலை அடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் இரு பெரும் முன்னோடித் தலைவர்கள். குலசமய வேறுபாடின்றிப் பொதுமக்களுக்கு சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவர். மறைமலையடிகள் 54 நூல்களை எழுதியுள்ளார்.மறைமலையடிகள் 1950ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் நாள் மறைந்தார்.