பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு மறுதேர்வுக்கான முழு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது
பொறியியல் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் இணையம் மூலமாக தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை தொழில் நுட்பக் கோளாறு காரணமாக பல மாணவர்கள் எழுதவில்லை என புகார்கள் எழுந்தன. அதனை கருத்தில் கொண்டு, மறுதேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், இறுதியாண்டு மாணவர்களுக்கு மறுதேர்வுக்கான முழு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
நவம்பர் 17ஆம் தேதி முதல் 21ம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. மேலும், ஒவ்வொரு பாடப் பிரிவு மாணவர்களுக்கும் தனித்தனியாக அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன் விவரங்களை அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ தளமான https://www.annauniv.edu/ இல் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.