tamilnadu

img

தமிழகத்தில் என்.ஆர்.சி.யை கொண்டு வந்தால் அதிமுக எதிர்க்கும்: அமைச்சர் உதயகுமார்

சென்னை,டிச.7- தமிழகத்தில் என்.ஆர்.சி.யை கொண்டுவந்தால் முதல் குரலாக அ.தி.மு.க எதிர்க்கும் என்று அமைச்சர் உதயகுமார் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் செவ்வாயன்று (ஜன.7)  குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. கேரளா போல் குடியுரிமை சட்டத்திற்கு எதி ராக சட்டப்பேரவையில்  தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக  உறுப்பினர் துரைமுருகன் பேசி னார். பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும்போது ஏன் எதிர்க்க வில்லை? என அமைச்சர் உதய குமார் கேள்வி எழுப்பினார். பாஜக கூட்டணியில் இருந்த போது குடியுரிமை சட்டம் திருத்தப் படவில்லை என துரைமுருகன் பதில் அளித்தார். அப்போது குடி யுரிமை சட்டத்திற்கு எதிராக எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, அபுபக்கர் கோஷம் எழுப்பியதால் சட்டப்பேரவையில்  பரபரப்பு ஏற்பட்டது. சிறுபான்மையினருக்கு ஆதர வாக உள்ளதாகக் கூறும் அதிமுக, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தது ஏன்? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதிமுகவால் ஒரு சிறுபான்மை யினராவது பாதிக்கப்பட்டு உள்ள தாக  சுட்டிக்காட்ட முடியுமா என  அமைச்சர் உதயகுமார் கேட்டார். துரைமுருகன் பேசும்போது, குடி யுரிமை சட்டத்தை எதிர்க்கவில்லை, திருத்தத்தையே எதிர்க்கிறோம் எனக் கூறினார். அதன்பின்னர் அமைச்சர் உதய குமார் பேசும்போது, ‘அசாமை தவிர  வேறுஎந்த மாநிலத்திலும்  தேசிய  குடிமக்கள் பதிவேட்டை அமல்ப டுத்த வில்லை. தேசிய குடிமக்கள் பதிவேட்டை தமிழகத்தில் அமல்ப டுத்த நினைத்தால் முதல் குரலாக அதிமுக எதிர்க்கும்’ என்றார்.

;