தமுஎகச வலியுறுத்தல்
சென்னை,ஜூன் 26- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி யானது விண்ணப்பித்த மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கும் நிபந்தனையற்று பொருந்தும் என அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத்தலைவர் (பொறுப்பு) மதுக்கூர் இராமலிங்கம், பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: கொரோனா ஊரடங்குக் காலத்தில் பொதுத் தேர்வை நடத்தக்கூடாது என்று மாணவர் நல னில் அக்கறையுள்ள பலரும் வலியுறுத்தி யதன் பேரில் தமிழக அரசு தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவருமே தேர்ச்சிபெற்றதாக அறி வித்தது. ஆனால் இந்த ஆரவாரமான அறி விப்பு நடைமுறைக்கு வரும்போது காலாண்டு மற்றும் அரையாண்டுத்தேர்வு மதிப்பெண், வருகைப்பதிவேடு அடிப்படையில் தான் தேர்ச்சி என்றாகியுள்ளது. மேலும், பல்வேறு காரணங்களால் காலாண்டு அல் லது அரையாண்டுத் தேர்வினை எழுதத் தவறிய மாணவர்கள் மற்றும் நேரடியாக பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்திருக்கும் தனித்தேர்வர்கள் ஆகியோரின் தேர்ச்சி நிலை என்னவென்று இன்னமும் தெளிவு படுத்தப்படாமல் விடப்பட்டுள்ளது.
மேலும், மும்பையில் இயங்கும் இரண்டு பள்ளிகளின் மாணவர்கள் உள்ளிட்ட 190 பேர் தனித் தேர்வர்களாக தமிழ்நாடு பாடத்திட்ட த்தின் கீழ் இவ்வாண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த னர். 1989ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் பொதுத்தேர்வு நடக்கும்போதே மும்பை யிலும் தேர்வை நடத்தி தமிழகத்தில் தேர்வு முடிவு அறிவிக்கும்போதே மும்பை தேர்வர் களுக்கான முடிவையும் அறிவிக்கின்ற கடந்த கால நடைமுறை இவ்வாண்டும் கடைப் பிடிக்கப்படும் என்று இந்த 190 பேரும் காத்திருந்தனர். ஆனால் இவர்களது தேர்ச்சிநிலையும் இன்னமும் தெளிவுபடுத்தப்படாமல் விடப் பட்டுள்ளது. எனவே, பொதுத்தேர்வு ரத்து- அனைவரும் தேர்ச்சி என்கிற அறிவிப்பா னது பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த மாண வர்கள், தனித்தேர்வர்கள் அனைவருக்குமே நிபந்தனையற்று பொருந்தும் என்று தெளிவு படுத்தி உத்தரவினை தமிழக அரசு வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.