tamilnadu

img

இரவில் கடைகள்: புதிய வெளிச்சம் பிறக்குமா?

இரவிலும் தூங்கா நகரம் என்று பெயர் பெற்றிருந்தது மதுரை. மாலையில் கல்யாணம் நிச்சயித்து, இரவிலேயே அனைத்துப் பொருட்களும் வாங்கி, விடிகிற போது திருமணத்தை நடத்தி முடித்துவிடலாம் என்பார்கள். அந்த அளவுக்குப் பல்வேறு வகைப் பட்ட பொருட்களை விற்கிற கடைகளில் வகைக்கு ஒரு கடையாக இரவில் திறந்திருக்கும். கடைக் காரர்கள் சுழற்சி முறையில் இரவில் மாறி மாறிக் கடை திறந்து வைப்பார்களாம். நகரின் மையப் பகுதியில் ஒரு மருந்துக் கடை ஆண்டு முழுக்க இரவில் திறந்திருக்கும். திடீர் மருந்துத் தேவை ஏற்படுகிறபோது அந்தக் கடைக்கு நம்பிச்  செல்லலாம். இப்போதும் அந்தக் கடை அங்கே அதேபோல் செயல்படுகிறதா என்பது தெரியவில்லை. வணிக வளாகங்கள், கடைகளை இனி 24 மணிநேரமும் திறந்து வைத்திருக்க அனு மதிக்கப்படுகிறது. ஏற்கெனவே மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டத்திற்கு ஏற்ப இதற்கான ஆணையைத் தமிழக அரசு வெளி யிட்டுள்ளது. செய்தியைப் பார்த்ததும் இந்த மதுரை அனுபவம் நினைவுக்கு வந்தது. இனி இரவிலும் வணிக வளாகங்களில், கடை களில் விற்பனை இருக்குமென்பதால் கூடுதல் ஊழியர்கள் தேவைப்படுவார்கள், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும், வணிகச் சுழற்சி விரிவடைவதால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் வலுப் படுத்தப்படும் என்று பல கோணங்களில் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன.

சிறிய கடைகளுக்கு அனுமதி இல்லை

அதே வேளையில் இதில் சில நிபந்தனை களும் உள்ளன. 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யக்கூடிய கடைகள் மட்டுமே இரவில் திறந்திருக்க அனுமதிக் கப்படும். ஒரே ஒருவர் அல்லது இரண்டு பேர் இருக்கக்கூடிய கடைகளுக்கு இந்த அனுமதி கிடையாது. அதாவது சிறிய டீக்கடைகள், ஜெராக்ஸ் கடைகள், பெட்டிக் கடைகள், பழச்சாறு கடைகள், சிறு மருந்துக் கடைகள், சலவைக் கடைகள், மளிகைக் கடைகள், எழுதுபொருள் கடைகள் உள்ளிட்டவை பகலில்  மட்டுமே இயங்க முடியும். தொழில் முறைகள், வேலைத் தன்மைகள், வாழ்க்கை நிலைமைகள் ஆகியவை மாற்றமடைந்துள்ள சூழலில் வணிக ஏற்பாடு கள் மட்டும் மாறாமல் முன்போலவே இருக்க முடி யாது. அந்த வகையில் கடைகளும் இதர வணிக வளாகங்களும் நாள் முழுக்கச் செயல்படுவது வரவேற்கத்தக்க மாற்றம்தான். ஆனால், சிறிய கடைகள் செயல்பட முடியாது என்கிறபோது, கார்ப்பரேட் குழுமங்கள் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களின் கிளைகள்தாம் எந்நேரமும் திறந்திருக்கும். இது படிப்படியாக சிறிய வணிகர்களின் வாழ்வாதாரம் அரிக்கப்படுவதில் போய் முடியும். பகல் நேர விற்பனையின் நெருக்கடி குறையும்  என்பதால், இரவில் குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு பொருள் வாங்க வருவோருக்குச் சிறப்புத் தள்ளுபடிகளைக் கடைக்காரர்கள் அறி விக்கக்கூடும். இரவு ஷிப்டுகளில் வேலை  செய்வதற்கென கூடுதல் பணியாளர்கள் தேவை ப்படுவார்கள் என்பதால் அத்தகையோருக்கும் அவர்களது கண்காணிப்பாளர்களுக்கும் என வேலைவாய்ப்புகள் சற்றே அதிகரிக்கிற வாய்ப்பும் இருக்கிறது என்பதை மறுப்பதற் கில்லை. கூடுதல் சம்பளம் என ஆசை காட்டி,  பகல் நேரப் பணியாளர்களையே இரவிலும் கூடுதல் நேரம் வேலை செய்யக் கட்டாயப் படுத்துகிற, அல்லது அதிகாலையிலேயே வந்து விடச் சொல்கிற உழைப்புச் சுரண்டல்களைத் தொழிலாளர் துறை அதைக் கண்காணித்துத் தடுக்கும் என்று நம்புவோமாக! 8 மணி நேரத்துக்கு மேல் வேலை வாங்கக் கூடாது, கூடுதல் பணி நேரத்துக்கான கூடுதல் ஊதியத்தைத் தொழிலாளர் வங்கிக் கணக்கில் சேர்த்துவிட வேண்டும், வாரம் ஒரு நாள் விடு முறை வழங்க வேண்டும், வாரத்தில் 48 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்யத் தேவை யில்லை என்பன போன்ற விதிகள் எந்த அளவுக்குக் கறாராகப் பின்பற்றப்படுகின்றன, அதிகாரிகள் எந்த அளவுக்கு நேர்மையாகக் கண்காணித்து உறுதிப்படுத்தப்போகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

பெண்கள் பாதுகாப்பு?
இரவில் கடைகளுக்குச் செல்கிறவர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு, பாதுகாப்பு இருக்குமா என்பது இன்னொரு கேள்வி. இரவில் கடைகள் திறந்திருப்பதால் மக்கள் நட மாட்டம் அதிகரிக்கும் என்பதால் பாது  காப்பும் அதிகரிக்கும், காவல் துறையின் நட வடிக்கைகளும் அதற்கேற்பத் திட்டமிடப்படும் என்று சொல்லப்படுகிறது.

இரவில் தேநீர் கிடைக்குமா?

இரவில் 11 மணிக்கு மேல் தேநீர்க் கடை களைத் திறக்கக் கூடாது என்ற தடை சென்னை யிலும் மற்ற பெரிய நகரங்களிலும் இருக்கிறது. திரையரங்குகளோடு கூடிய வணிக வளா கங்களில் உள்ள உணவகங்களும் தேநீர்க் கடை களும் திறந்திருக்கலாம், அங்கிருந்து வெளியே வருகிறவர்கள் டீ குடிக்க நினைத்தால் சாலை யோரக் கடைகள் எதுவும் திறந்திருக்காது என்பது பெரிய பாகுபாடு. பேருந்து நிலையம் போன்ற இடங்களில் இரவில் கடை திறக்க அனு மதி உண்டு என்றாலும், எல்லாக் கடைகளையும் திறக்க முடியாது, அதற்கெனச் சிறப்பு அனுமதி பெற்ற கடைகளைத்தான் திறந்து வைக்க முடியும். தற்போதைய முடிவால் சிறிய தேநீர்க் கடை களுக்கு எந்த ஆதாயமும் இல்லை. அத்தகைய கடைகளை நாடக்கூடிய வாடிக்கையாளர் களுக்கும் பயனில்லை. இந்தத் தடையாணை அரசாங்கத்தால் அறவிக்கப்பட்டதல்ல, சட்டம் ஒழுங்கின் பெயரால் காவல் துறையாலும் அந்தந்த மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங் களாலும் கொண்டுவரப்பட்டது என்பதால் தடை  தொடரும் எனத் தெரிகிறது. தடையை விலக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தேநீர்க் கடை உரிமையாளர் சங்கத்தினர் தங்கள் மாநாடுகள் மூலம் தொடர்ந்து வலியிறுத்தி வருகிறார்கள்.

பொருளாதாரமே மேம்படுமா?
இந்த வணிக நேர நீட்டிப்பால், ஒட்டுமொத்த வர்த்தகம் அதிகரிக்கும், பணச் சுழற்சி கூடுத லாகும், நாட்டின் பொருளாதாரமே மேம்பட்டு விடும் என்றெல்லாம் அடுத்த கட்டக் கனவு களுக்கு முன்னுரை எழுதப்படுகிறது. பகலோ, இரவோ வணிக நிறுவனங்களில் பொருட்களை வாங்கப் போகிறவர்கள் என்னவோ அதே மக்கள்தாம். இரவில் பொருட்கள் வாங்குவோர் மக்கள்தொகை இதனால் அதி கரித்து விடப்போவதில்லை. குறிப்பிட்ட நாளில் பகலில் கடைக்குப் போனவர்கள் இப்போது இரவில் தாங்கள் விரும்புகிற நேரங்களில் செல்வார்கள் அவ்வளவுதான். அதற்காக, பகலில் ஒரு டூத் பேஸ்ட் வாங்குகிறவர்கள் இரவில் இரண்டு பேஸ்ட்டுகள் வாங்க மாட்டார்கள். பகலில் 20 கிலோ அரிசி வாங்குகிறவர்கள் இரவில் 40 கிலோ வாங்க மாட்டார்கள். ஆக, வணிகர்களின் மொழியில் சொல்வதானால் “சரக்குகளின் அழிவு” அப்படியேதான் இருக்கப்போகிறது. ஆக, பெரும்பாலும் இந்த நிலைமைதான் இருக்கும் என்கிறபோது ஒட்டுமொத்த வர்த்தகம் எப்படி அதிகரிக்கும்? பணச் சுழற்சி எப்படிக் கூடுதலாகும்? நாட்டின் பொருளாதாரம் எப்படி மேம்படும்?

மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்தால்தான், விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு நியாயமான விலை கிடைத்தால்தான், அற்ப சொற்ப ஊதியத்துக்கு வேலை என்ற காண்டிராக்ட் முறை ஒழிந்தால்தான், சம வேலைக்குச் சம ஊதியம் என்பது மெய்யான நடப்பாக மாறினால்தான், எவ்வளவு நல்ல சம்பளமானாலும் உள்நாட்டு/பன்னாட்டு கார்ப்பரேட் நிர்வாகங்கள் எந்த நேரத்திலும் வேலையிலிருந்து தூக்கிவிடும் என்ற நிலைமை தடுக்கப்பட்டால்தான் இதிலே மாற்றம் வரும். அப்போதுதான் கூடுதல் பொருட்களில் மக்கள் முதலீடு செய்வார்கள். அப்போதுதான் வர்த்தகம் அதிகரிப்பது உள்ளிட்ட மாற்றங்கள் நிகழும். மக்களின் வருவாய் நிலை உறுதிப்படுகிற போதுதான், அவர்களுடைய வேலைவாய்ப்பு கள் பெருகுகிறபோதுதான் வாங்கும் சக்தி  அதிகரிக்கும். இருக்கிற வேலை வாய்ப்பு களுக்கும் மூடுவிழா நடத்துகிற கொள்கைகள் மக்கள் தலையில் சுமத்தப்படுகிறபோது அவர் களின் வாங்கும் சக்தியாவது அதிகரிப்பதாவது? இனி இரவு நேரங்களில் பொருட்கள் வாங்கப் போகிறவர்கள், இந்தச் சிந்தனையை யும் கொள்முதல் செய்து வைத்துக்கொள்வார் களானால் பொழுது விடிவதற்கான வெளிச்சம் பிறக்கும்.