tamilnadu

img

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கோரி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சென்னை,ஜன.10- மறைந்த முதலமைச்சர் ஜெயலலி தாவின் மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணைக்கு தடை விதிக்கக்கோரியும், ஜெயலலிதா வுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து 21 டாக்டர்கள் அடங்கிய நிபுணர் குழு மூலமாக விசாரிக்கக்கோரியும் அப்பல்லோ மருத்துவ மனை  நிர்வாகம், சென்னை உயர் நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்தது. உயர்நீதிமன்றம்,  நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்க மறுத்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக அப்பல்லோ மருத்துவமனை  தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அப்பல்லோ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோகிணி மூசா, தங்கள் தரப்பில் எதிர் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவைப்படுவதாக கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதி பதிகள் வழக்கை  பிப்ரவரி இறுதி வாரத்துக்கு ஒத்தி வைப்பதாக உத்தரவு பிறப்பித்தனர்.

;