சென்னை,அக்.1- மருத்துவப்படிப்புக்கான ‘நீட் ‘நுழைவுத்தேர்வு ஆள்மாறாட்ட விவ காரத்தில் மேலும் ஒரு மாணவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தேனி மருத்துவக்கல்லூரியில் படித்த சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த மருத்துவ மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை மருத்து வர் வெங்கடேசன் ஆகியோரை சிபிசிஐடி தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசார ணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. அதனடிப்படையில் தனிப் படை அமைத்து விசாரணை மேற்கொள் ளப்பட்டது. இதில் 2 மாணவர்கள்,ஒரு மாணவி கைது செய்யப்பட்டனர். மாணவி மட்டும் நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டார். இதில் வேலூர் மாவட்டம் வாணியம் பாடியைச் சேர்ந்த இர்ஃபான் என்ற தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் படித்த மாணவர் தலைமறைவாகியி ருந்தார். தற்போது மாணவர் இர்ஃபான் சேலம் நடுவர் குற்றவியல் நீதிமன்றத் தில் நீதிபதி சிவா முன்னிலையில் ஆஜ ரானார். ஆஜரான மாணவர் இர்ஃபானை அக்டோபர் 9 ஆம் தேதிவரை சிறையி லடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து இர்ஃபான் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.