tamilnadu

வாகனங்களுக்கு பன்மடங்கு கட்டணம்: இரா. முத்தரசன் கண்டனம்

சென்னை, ஜூலை 28- வாகனங்களுக்கு பன்மடங்கு கட்டணம் உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சி யின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களை பதிவு செய்ய மற்றும் புதுப்பித்தலுக்கான கட்டணத்தை பன்மடங்கு உயர்த்திட மத்திய அரசு முடிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது. சுற்றுச்சூழலை பாது காக்க பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்து பேட்டரியில் இயங்கும் வாகனங்களின் எண்ணி க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தி ற்காக வாகனங்களின் கட்ட ணம் உயர்த்தப்படுவதாக மத்திய அரசு விளக்க மளித்துள்ளது. பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் தற்போது அறிமுக நிலை யில்தான் உள்ளது. இத்தகைய வாகனங்கள் முழு பயன்பாட்டிற்கு வரும் பொழுது, அதனால் மிகப்பெரும் பயன் கிடைக்கும் என்ற நிலை உருவானால், பொதுமக்கள் தாங்களாகவே பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்குவதற்கு மாற்றாக பேட்டரி வாகங்களை வாங்கு வதற்கு முன்வருவார்கள். பேட்டரி வாகனங்களை வாங்கும் பொது மக்களுக்கு வரி குறைப்பு உள்ளிட்ட சலுகைகளை அரசு அறிவித்துள்ளது. மேலும் சலுகைகளை அறிவித்து ஊக்குவிப்பது தவறல்ல. ஆனால் பெட்ரோல் - டீசல் வாகனம் வாங்குவோர்களை யும், பயன்படுத்திக் கொண்டி ருப்பவர்களையும் தண்டிக்கும் விதமாக வாகனங்களை பதிவு செய்யவும், புதுப்பிக்கவும் ரூ.1,000-ம் முதல் ரூ.20,000 வரை கட்டணத்தை உயர்த்து வது தண்டனை தருவதாகும். கட்டணங்களை பன்மடங்கு உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது.இத்தகையை நடவடி க்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியு ள்ளார்.