சென்னை, ஜூலை 16- தமிழக சட்டப்பேரவையில் செவ்வாய்க் கிழமை(ஜூலை16) சுகாதாரத்துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்தை துவக்கிய திமுக உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா,“நீட் தேர்வை எதிர்த்து உயிரை மாய்த்துக் கொண்ட மாண வர்களுக்கு கண்ணீர் அஞ்சலியோடு தனது உரையை துவக்கினார். தொடர்ந்து பேசிய அவர், “நீட் தேர்வும் தமிழகத்தில் அதற்காக அமைக்கப்பட்டுள்ள பயிற்சி மையங்களும் ‘நவீன தீண்டாமை’ என்றும் கடுமையாக சாடினார். சுகாதாரமின்மையால் ஏற்படும் விளைவு கள் குறித்து மேலும் விழிப்புணர்வு தேவைப் படுகிறது. மாரடைப்பால் மிக இளம் வயது மரணம் அதிகமாகி வருவதையும் சுட்டிக் காட்டினார். மார்பக புற்று நோய், கர்ப்ப பை வாய் புற்று நோயால் பெண்கள் பெரிதும் பாதிக் கப்படுகிறார்கள். கடைகளில் விற்பனை செய்யப்படும் தின்பண்டங்களை அதிகம் உட்கொள்ளும் இளம் வயதினர், சிறு வயதி லேயே ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற பாதிப்புகளுக்குள்ளாகின்றனர். ஆகவே, சிகரெட், மது பாட்டில்களில் எச்சரிக்கை விளம் பரங்களைப் உள்ளதை போல, ஸ்வீட் உள்ளிட்ட தின்பண்டங்களில் எவ்வளவு கலோரிகள் உள்ளன? அவற்றை அதிக அளவு சாப்பிடுவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என அந்த பொட்டலங்களின் பாக் கெட்கள் மீது லேபிள் விளம்பரம் செய்ய அரசு உத்தரவிடவேண்டும் என்று வலி யுறுத்தினார்.
தின்பண்டங்களில் எச்சரிக்கை லேபிள்!
அப்போது குறுக்கிட்ட முதலமைச்ச எடப்பாடி பழனிசாமி, நல்ல கருத்தை உறுப்பினர் பூங்கோதை தெரிவித்துள்ள தாகவும், ஸ்வீட் அதிகம் சாப்பிட வேண்டாம் என்றால் ஏற்றுக்கொள்வார்களா? என்று தெரியவில்லை. ஆனாலும், சிகரெட் பாக் கெட்டுகளில் எச்சரிக்கை படம் போல், உட லுக்கு தீங்கு விளைவிக்கும் தின்பண்டங்க ளின் பாக்கெட்டுகளிலும், அவற்றின் பாதிப்பு கள் குறித்த விழிப்புணர்வுப் படங்களை இடம் பெறச் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.