tamilnadu

img

வியாபாரிகள் அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் கடைகளை ஒதுக்கீடு செய்ய ஆர்ப்பாட்டம்

சேலம் மாநகராட்சியில் போலி ரசீது அச்சடித்து வியாபாரிகளிடம் வசூல் செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனந்தா காய் மார்க்கெட்டை இயக்க வேண்டும். வியாபாரிகள் அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.