tamilnadu

img

நகைக்காக மூதாட்டியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

மதுரை, பிப். 24- திருச்சிராப்பள்ளி பாரத மிகுமின் நிறு வன குடியிருப்பில்  மூதாட்டியை கொலை செய்து நகை திருடியவருக்கு ஆயுள் தண்ட னையும் மற்றொருவருக்கு மூன்றாண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர விட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி பாரத மிகுமின் நிறுவன குடியிருப்பில் வசித்து வந்தவர் மகாலட்சுமி என்ற மூதாட்டி. இவருடைய மகன் பிஎச்இஎல்- லில் பணிபுரிந்து வந்தார் சம்பவத்தன்று மகாலட்சுமி வீட்டில் தனி யாக இருந்தார்.அப்போது  மகனுக்கு  பழக்க மான ஓட்டுநர் முரளி  கடந்த 2011-ஆம் ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியை கொலை செய்து அவர் கழுத்தில் கிடந்த 16 பவுன் தங்கச் சங்கிலியை கொள்ளையடித்துச் சென்றார். இந்த சம்பவத்திற்கு உடந்தையாக கார்த்திக் என்பவரும் இருந்துள்ளார்.

இந்த மூதாட்டி கொலை, நகை பறிப்பு தொடர்பாக திருச்சிராப்பள்ளி பிஎச்இஎல்  காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து திருச்சிராப்பள்ளி நீதிமன்றத்தில்  வழக்குத் தொடர்ந்தனர் வழக்கை விசாரித்த நீதிபதி இருவரையும் விடுவித்து உத்தரவிட்டார்.இந்த விடுதலையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் காவல்துறை சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.   இந்த மனுவை திங்களன்று விசாரித்த நீதிபதிகள் ராஜா, புகழேந்தி அமர்வு நகைக்காக மூதாட்டியை கொலை செய்த முரளிக்கு ஆயுள் தண்டனையும்,  கார்த்திக் குக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனையும் விதித்து உத்தரவிட்டனர்.