tamilnadu

img

கொள்ளை போகும் தொழிலாளர் ஊதியம் - கே.விஜயன்

இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்த மோடி அரசு நிலுவையிலிருந்த தொழிலாளர் சட்டங்களை 4 பகுதிகளாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதில் ஒன்று ஊதியப்பகுதி. இந்த ஊதியப்பகுதியில் குறைந்தபட்ச ஊதியச்சட்டம் 1948, சம்பள பட்டுவாடா சட்டம் 1936, போனஸ் சட்டம் 1965 மற்றும் சம வேலைக்கு சமஊதியச் சட்டம் 1976 ஆகியவை அடங்கும். இது நாடாளுமன்றத்தில்நிறைவேறி சட்டமாகி உள்ளது.  சட்டத்தை முன்மொழிந்த தொழிலாளர் துறை அமைச்சர் இச்சட்டம் அமைந்த காரணத்தினால் 50 கோடி தொழிலாளர்கள் பலன் பெறுவார்கள் என்று தெரிவித்துள் ளார். பலன் ஒன்றுமே இல்லை என்றாலும் மணலை கயிறாக திரிப்பதில் வல்லவர்கள் பாஜக அமைச்சர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். உண்மையிலேயே தொழி லாளர்கள் ஊதியம் உயரப்போகிறதா?  இந்த குறைந்தபட்ச ஊதியம் உயருவதாக மோடி அரசு சொல்வது உண்மையா? இதனால்  45 ஆண்டுகளில் இல்லாத வேலையின்மை ஒழிந்துவிடும் என்பது நடக்குமா? நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி  உயர்ந்து விடுமா?  

இவை நிறைவேறாது என்பதைத் தான் இன்றைய பொரு ளாதார வீழ்ச்சி என்பது காட்டுகின்றது. நுகர் பொருட்கள் விற்பனை எல்லாம் 20 சதவீதம் முதல் 30 சதவீதம் விற்பனை சரிவு. ஆட்டோ மொபைல் துறையில் 3 கோடி எண்ணிக்கை யில் வேலை இழப்பு. இதிலிருந்து அரசின் பொருளாதாரம் மீளவேண்டும் என்பதற்காகத்தான்இந்தியாவில் செயல்படும் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் ஒன்று சேர்ந்து அகில இந்திய அளவில் இரண்டு நாள் வேலைநிறுத்தங்கள் நடத்தி அரசு தனது நிலையை மாற்றிக்கொள்ளவேண்டும் என  போராடினர்.  ரூ. 18 ஆயிரம் மாத ஊதியம், ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரம், விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.  மோடி அரசு ஊதியம் நிர்ணயிப்பிற்கான வல்லுநர் குழு ஒன்றை அமைத்தது. அந்த குழு குடும்பம் என்பது 3 யூனிட் என்பதை 3.6 யூனிட் ஆக மாற்றியது.

இந்தியா முழுமைக்கான ஒரே ஊதியமாக தரைத் தள ஊதியம் மாதம் ரூ. 9750 மற்றும் வீட்டுவாடகைப்படியாக ரூ.1452 மற்றும் நகரமாக இருந்தால் நகர ஈட்டுப்படி வழங்கிட அரசுக்கு பரிந்துரை செய்தது. வல்லுநர் குழு சிபாரிசு செய்த குறைந்தபட்ச ஊதியம் ஏழாவது ஊதியக்குழு உருவாக்கிய குறைந்தபட்ச ஊதி யத்தைக்கூட நெருங்கவில்லை.ஏழாவது ஊதியக்குழு ரூ. 21 ஆயிரத்தை உருவாக்கியது. அதற்கான அடிப்படை அம்சங்களாக  எடுத்துக்கொள்ளப்பட்டது. ராப்டகாஸ் தீர்ப்பு மற்றும் டாக்டர் அக்ராய்டு பார்முலா ஆகும்.அதன் அடிப்ப டையில் தான் ஏழாவது ஊதியக்குழு உருவாக்கப்பட்டது.

15 ஆவது இந்திய தொழிலாளர் மாநாடு முடிவு என்ன சொல்கிறது? ஒரு தொழிலாளி வாழ்வதற்கு 2700 கலோரி வெப்ப சக்தி கிடைக்கும் உணவை உண்ணுவதற்கும் தனி நபருக்கு 18 கஜம் துணி வாங்குவதற்கும் வீட்டு வாடகைக்கும் என்று குறைந்தபட்ச ஊதியம் இருக்கவேண்டும் என்று முடிவு செய்தது. ஆனால் தற்போதைய வல்லுநர் குழு இவை எதையும் பொருட்படுத்தாமல் உருவாக்கப் பட்ட குறைந்தபட்ச ஊதியத்தைக்கூட இரண்டாவதாக மத்தியில் ஆட்சிக்கு வந்த அமைச்சரவை நிராகரித்து விட்டது. ரூ.178 தான் குறைந்தபட்ச தின ஊதியமாக இந்தக் குழு நிர்ணயம் செய்துள்ளது.  தற்போது அரசின் கணக்கெடுப்பு சொல்வது என்ன? தொழிலாளி தனது ஊதியத்தில் உணவுக்காக 66 சத வீதத்தை செலவழிப்பதாக சொல்கிறது. அப்படி என்றால் துணி மற்றும் வீட்டு வாடகை மற்றும் சமூக கடமைகள் நிறை வேற்றுவதற்கு தொழிலாளி எங்கே செல்வான்? பெற் றோர்களை பாதுகாக்க வேண்டியது மகனின் கடமை என்று தீர்ப்பை நீட்டி வழங்கும் நீதிபதிகள் வயதான பெற்றோர் களை வைத்து காப்பாற்றுவதற்கு உண்டான ஊதியத்தை வழங்க மறுக்கும் அரசைப்பற்றி என்ன கூறுவர்?

குறைந்தபட்ச ஊதியம் தொடர்பாக நீதிமன்றத்திற்கு வரும் வழக்குகளில் வழங்கப்படும் தீர்ப்புகள் தொழிலா ளர்களுக்கு எதிரான தானடித்த மூப்பாகவே உள்ளது.  சிஐடியு உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும் இதை எதிர்த்து நிற்கின்றன. இந்த குறைந்த பட்ச தின ஊதியத்தை முடிவு செய்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் தொழிலாளர் அமைப்பு ஆன பாரதிய தொழிலாளர் சங்கம் (BMS) அரசின் இந்த முடிவினை எதிர்த்துள்ளது.   மத்திய அரசானது தொழிலாளரின் கருத்தை கேட்பதற்கு பதிலாக  முதலாளிகள் கருத்தைக் கேட்டது. முதலாளிகள் இந்த பாஜக அரசால் நியமனம் செய்யப்பட்ட வல்லுநர் குழு சிபாரிசு செய்த தர ஊதியத்தை மத்திய அமைச்ச ரவை ஏற்றால் ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் தொழிலே முடங்கிவிடும் என்று சொன்னார்களாம். அதனால் குறைந்த பட்ச ஊதியத்தை பாதியாக குறைத்துவிட்டது மோடி அரசு.

இந்தியாவில் வேலையில் இருக்கும் தொழிலாளர்களில் 45 சதவீதம் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தான். தொழிலாளர்களுக்கான  ஊதியத்தை நிர்ணயிக்க மத்திய அமைச்சரவை 1986 ஆம் ஆண்டு விலைவாசியை அடிப்படையாக எடுத்துக்கொண்டு இருந்தது அதை மாற்றி 2018 இல் உள்ள விலைவாசியை அடிப்படையாக வைத்து ஊதியத்தை நிர்ணயித்துள்ளது.  அது தான் ரூ. 2 உயர்வாக வந்துள்ளது. இதற்கு பாஜக  அரசு கூறும் காரணம் தொழிலாளர்களின் உணவு பழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டு விட்டதாம். தொழிலாளர்கள் இதற்கு முன் அந்தந்தப்பகுதியில் பழக்கத்தில் உள்ள உணவு வகை களை சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்களாம்.  தற்போது தொழிலாளர்களுக்கும் அவரது குடும்பத்துக் கும் பர்கர் ,பீஸா சாப்பிடும் பழக்கம் வந்துவிட்டதாக பாஜக அமைச்சரவை நம்புகிறதாம்?

நாடு முழுவதும் ஒரே ஊதிய அடிப்படை என்று அறி வித்துள்ளது. ஒரே பணியைச்செய்யும் பெண் தொழிலா ளர்களுக்கு ஆண் தொழிலாளர்களுக்கு அளிப்பதை விட குறைவாகவே ஊதியம் அளிக்கப்படுகின்றது. மத்திய அரசின் இந்த அறிவிப்பினால்  கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் தொழிலாளர்களுக்கு அளிக்கும் ஊதியம் குறைந்துவிடும். தற்போது நடைமுறையில் உள்ள குறைந்தபட்ச ஊதி யத்தைவிட குறைவாகவே 45 சதவீத ஒப்பந்தத் தொழிலா ளர்களுக்கு அளிக்கப்படுகின்றது. 

திருவள்ளூர் மாவட்டத்தில் சிறு தொழில்கள் அதிக மாக உள்ளன. இங்கு  உள்ள தொழிற்சாலைகளில் 20 மற்றும் அதற்கு சற்று அதிகமான எண்ணிக்கையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் பொறியியல் துறையில் அன்ஸ்கில்டு தொழிலாளிக்கு வழங்க வேண்டிய தின ஊதியம் ரூ.430 என்றால் அளிக்கப்படும் தின  ஊதியம் ரூ.350 தான்.  பெண் தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் ரூ.8 ஆயிரத்திற்குள் தான் இருக்கிறது. அரசு கொடுத்த புள்ளி விபரப்படி பார்த்தால் மொத்த தொழிலாளர் எண்ணிக்கை யில் மாத ஊதியம் ரூ.5 ஆயிரம் வரை பெறுவோர் 12.2 சத வீதம், 10 ஆயிரம் வரை ஊதியம் பெறுபவர்கள் 32.7 சதவீதம் 15 ஆயிரம் வரை ஊதியம் பெறுவோர் 18.8 ஆகும். ரூ.20 ஆயிரம் வரை ஊதியம் பெறுவோர் 10.8 சதவீதம், 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை ஊதியம் பெறுவோர் 21.9 சதவீதம்ஆகும். 50 ஆயிரத்திற்கு மேல் பெறுவோர் 3.6 சதவீதம் மட்டுமே. 

அரசின் புள்ளி விபரப்படியே 62 சதவீதப் பணி செய்யும் தொழிலாளர்கள் ரூ. 15 ஆயிரத்திற்கும் குறைவாகவே பெறு கின்றனர்.இதனால் தான் மிக அதிகமாக விற்பனை ஆகும் பொருட்களான சோப் மற்றும் பிஸ்கட் போன்ற பொருட்கள் விற்பனை குறைந்து இருப்பதாக புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. இந்துஸ்தான் யுனிலீவர் பொருட்கள் விற்பனை 20 சதவீதம் குறைந்துள்ளது.புதிய தொழில்கள் வராத நிலையில் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. தற்போது செய்து கொண்டு இருக்கும் வேலையும் பறிபோகின்றது. தற்போது பணிபுரியும் பெரும்பாலான தொழிலா ளர்களும் குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறைவாகவே பெறு கின்றனர். ஆலை முதலாளி குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவாக அளிப்பதை யார் கண்காணிக்க முடியும்? கண்காணிக்க வேண்டிய மற்றும்  அமல்படுத்தும் அதிகாரி யிடம் முறையிட முடியாது. அதிகாரிகளும் ஆய்வு செய்ய முடியாது. பாஜக அரசால் நான்கு சட்டங்களை இணைத்து ஒரு தொகுப்பாக மாற்றப்பட்டதால் அத்தகைய ஏற்பாடு இனி இல்லை. முதலாளிகளுக்கு லாபம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டும். உலகத்தின் முதலாளிகள் பட்டியலில் இந்தியாவில் உள்ள முதலாளிகளின் பெயர்கள் சேர்வதற்கு வழி செய்வதற்குத்தான் இந்த தொழிலாளர் சட்டங்கள் உதவும். குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்கள் மேலும் மேலும் ஓட்டாண்டியாவது நடக்கும்.