tamilnadu

img

மதுபான கடைகள் சென்னையில் திறக்கப்படாது: அரசு அறிவிப்பு

சென்னை, மே 5 - சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி இல்லை என தமிழக அரசு  தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி முதல் அரசு  மதுபான கடைகள் திறக்கப்படும் என்று தமி ழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று அரசியல்  கட்சித் தலைவர்கள் மட்டுமன்றி சமூக ஆர்வ லர்கள் உள்ளிட்ட பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் சென்னையில் வைரஸ் பரவல்  நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார் இதில் அமைச்சர்க ளும் கலந்துகொண்டனர். இந்நிலையில், அரசு தரப்பில் வெளி யிடப்பட்ட அறிக்கையில், தமிழ்நாடு முழுவ தும் வரும் 7ஆம் தேதி அரசு மதுபான கடை கள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறி விக்கப்பட்டிருந்தது. ஆனால், சென்னை மாந கர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அன்றைய தினம் கடைகள் திறக்கப்பட மாட்டாது. டாஸ்மாக் கடைகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த் தொற்று வேகமாக பரவும்  நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகர காவல் எல்லை என்பது காஞ்சிபுரம் செங்கல்பட்டு, திரு வள்ளூர் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ள டக்கி உள்ளது. குறிப்பாக ஜிஎஸ்டி சாலை யில் வண்டலூர் வரையிலும், கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு வரையி லும், ஓ.எம்.ஆர். சாலையில் தாழம்பூர் வரை யிலும் எல்லையாக கொண்டது. குன்றத்தூர்,  மாங்காடு, நசரத்பேட்டை வரையிலும், திரு நின்றவூர், செங்குன்றம், மணலி, எண்ணூர் பகுதிகளும் சென்னை காவல் எல்லைக்குள் அடங்கும். மேலும் சென்னை நுழைவு வாயிலான தாம்பரம், ஆவடி, பூந்தமல்லி, அக்கரை சோதனை சாவடி, சோழிங்கநல்லூர் உட்பட்ட  பகுதிகளிலும் மற்றும் நகர் பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.