tamilnadu

img

தொழிற்பூங்காக்களில் ரூ. 2,934 கோடியில் நவீன உள்கட்டமைப்பு

சென்னை, மார்ச் 25- சிப்காட் நிறுவனம் புதிதாக அமைக்க வுள்ள தொழிற்பூங்காக்களில் 2,934 கோடி  ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நவீன உள்கட்ட மைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேர வையில் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 110-ன் கீழ்  முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தொழில் துறை குறித்து புதிய அறிவிப்பு களை வெளியிட்டுப் பேசினார். அதில், “ஓசூர் சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள  தொழிற்சாலைகளுக்கு தங்கு தடையின்றி தண்ணீர் வழங்கிட கெலவரப்பள்ளி அணைக்  கட்டிலிருந்து நீரைப்பெற்று, அந்நீரை  சுத்திகரித்து ஓசூர் சிப்காட் தொழிற்பூங்கா வில் உள்ள சுமார் 355 தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்கப்படும். இதற்கென நாளொன் றுக்கு 20 மில்லியன் லிட்டர் கொள்  திறன் கொண்ட மூன்றாம் நிலை சுத்திக ரிப்பு நிலையம் ரூ. 110 கோடி ரூபாய் திட்ட  மதிப்பீட்டில் நிறுவப்படும்.

தமிழ்நாட்டில் புதிய தொழில் முத லீட்டை ஈர்க்கும் வகையில், சென்னைக்கு அருகாமையில் சிப்காட் மாநல்லூர் தொழிற்பூங்காவில் மின்சார வாகனப் பூங்கா ஒன்று ரூ. 148 கோடியில் உரு வாக்கப்படும். சிப்காட் நிறுவனம் புதிதாக  அமைக்கவுள்ள மாநல்லூர், செய்யாறு,  மணப்பாறை, தேனி, மணக்குடி, சக்கரக் கோட்டை ஆகிய தொழிற்பூங்காக்களில் ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் வேளாண்மை ஊரக வளர்ச்சிக்கான தேசிய  வங்கி நிதி உதவியுடன் ரூ. 2,934 கோடியில்  நவீன உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்ப டுத்தப்படும். திருபெரும்புதூர் வட்டம் நெமிலி, மன்னூர் கிராமங்களில் சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 500 கோடியில் தரவு மைய  பூங்காவை  சிட்கோ உருவாக்கும். இப்பூங்கா வில் செயல்பாட்டுக்கு வரும் தொழில் நிறு வனங்கள் மூலம் சுமார் 3,500 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். நவீன யுகத்தின் பெரும் சொத்தாகக் கருதப்படும் தகவல்  தரவுகளுக்கான தொழிற்பூங்கா தமிழ் நாட்டில் அமைக்கப்படுவதன் மூலம், தக வல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாடு மேலும் முன்னேற்றம் அடைந்திடும். இவ்வாறு முதல்வர் கூறினார்.