மதுரை, ஆக.24- மதுரை இடையபட்டியில் தொடங்கப் பட்டுள்ள மூன்றாவது கேந்திரிய வித்தியாலயா பள்ளியில் இந்தாண்டே மாணவர் சேர்க்கை நடைபெறுமென மத்திய கல்வியமைச்சர் ரமேஷ்பொக்ரியால் நிஷாங்க் தெரிவித்துள்ளார். மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனின் கோரிக்கையை ஏற்று மாணவர் சேர்க்கைக்கான உத்தரவை அமைச்சர் வெளியிட்டுள்ளார். கல்வியமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ள சு.வெங்கடேசன் எம்.பி., கடந்த பத்தாண்டு களாக நிலப்பிரச்சனையிலிருந்த கேந்திரிய வித்யாலயா இடையப்பட்டி பள்ளியின் பிரச்சனைகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியின் பலனாக, பள்ளிக்குரிய நிலத்தை பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்க மத்திய உள்துறை அச்சகம் ஒப்புக்கொண்டிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.