tamilnadu

img

தனியார் பால் நிறுவனங்கள் முடங்கின ஆவின் சேவை அதிகரிப்பு

சென்னை, ஏப்.9- ஊரடங்கால், ஒட்டுமொத்த மக்களும் வீடுகளில் முடங்கி கிடக்க, தடைகள் பல கடந்து, பால் விநியோகிக்கும் பணியில் ஆவின் ஊழியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகிறார்கள். ஊரடங்கை காரணம் காட்டி, தனியார் பால் நிறுவனங்கள் பல, தங்கள் பணி களையெல்லாம் முடக்கிக் கொள்ள, எத்த கைய சூழல் உருவானாலும் மக்கள் பணியே முதன்மையானது என எண்ணி,  களத்தில் 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்கள் ஆவின் ஊழி யர்கள்.

விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லாரிகள் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படும் பால், உரிய முறை யில் பதப்படுத்தப்பட்டு, பின்னர் நகரின்  பல்வேறு பகுதிகளுக்கும் விநியோ கிக்கப்படுகிறது. ஒரு பிரிவுக்கு 300 பேர் வீதம் ஆவின்  ஊழியர்கள், விடுமுறையின்றி உழைத்து வருகிறார்கள். வழக்கத்தை விட, தற்போது நாளொன்றுக்கு ஒரு லட்சம் முதல் 2 லட்சம்  பால் பாக்கெட்டுகள் வரை, கூடுதலாக விற்பனை ஆகின்றன.

கொரோனா வார்டுகளில் தங்கி சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும், முதி யோர், ஆதரவற்றோர் முகாம்களில் தங்கி  இருப்பவர்களுக்கும் ஆவின் பால், இலவச மாக வழங்கப்படுகிறது. தடைகள் பல கடந்து, மக்களின் மனங்க ளில் பால் வார்த்து வரும் ஆவினுக்கு, வருங்காலத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என அதன் நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மிரட்டும் கொரோனாவை விரட்டும் பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஒருபக்கம் தீவிரமாக உழைத்து வருகிறார்கள். மற்றொருபுறம் பாதுகாப்பு பணியில் காவல்துறையினரும், தூய்மை பணியில் துப்புரவு பணியாளர்களும் இரவு - பகல் பாராது களத்தில் சுழன்று வருகின்றனர். இவர்களுக்கு இணையாக மக்களுக்கு  அத்தியாவசிய தேவையான பால் விநியோ  கிக்கும் பணியில், ஆவின் ஊழியர்கள், ஈடுபட்டு, மக்களின் மனங்களை கவர்ந்துள்ளனர். என் கடன் பணி செய்து கிடப்பதே என்பதை நிரூபித்துள்ளது, தமிழக அரசின் ஆவின் நிர்வாகம்.