tamilnadu

img

மார்ச் 31-ல் அடையாள உண்ணாவிரதம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் 

மதுரை, மார்ச் 15- குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு சட் டங்களை ரத்து செய்ய வேண்டு மென தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மூன்றாவது மாநில மாநாடு தமிழக அரசை வலி யுறுத்தியுள்ளது. தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மூன்றாவது மாநில மாநாடு மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது தலைமை வகித்தார். மாநில துணைத் தலை வர் என்.நன்மாறன் வரவேற்றார்.  மதுரை உயர் மறை மாவட்ட பேரா யரும் தமிழக ஆயர் பேரவை தலை வருமான அந்தோணி பாப்புசாமி மாநாட்டை துவக்கி வைத்துப் பேசி னார். மதுரை மக்களவை உறுப்பி னர் சு.வெங்கடேசன்,  அமைப்பின் மாநில நிர்வாகி தே.லட்சுமணன்,  திருவருட் பேரவை ஒருங்கிணைப் பாளர் அருட்தந்தை ஏ. அருள்,  சட்ட மன்ற முன்னாள் உறுப்பினர் ஆர். லீமாறோஸ், எம்.தாமஸ் சேவியர், வி. கல்யாணசுந்தரம், தஷ்ரிப் ஜஹான்,  எம். ஜான்சன், தென்னிந் திய திருச்சபை மதுரை-முகவை துணைத் தலைவர் யாக்கோபு,  ஜமாத்துல்  உலமா சபை தலைவர் சாகுல் ஹமீது, மக்களுக்கான மாற்று அரசியல் களத்தின் மதுரை ஒருங்கிணைப்பாளர்  பால் பிரிட்டோ, ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பொதுச் செயலாளர் ப. மாரிமுத்து பொதுச் செயலாளர் அறிக்கையும், பொருளாளர் எம். அஹமது உசேன் நிதிநிலை அறிக்கையும் சமர்ப்பித்தனர். வர வேற்புக் குழுச் செயலாளர் கே. அலாவுதீன் நன்றி கூறினார்.

இந்த மாநாட்டில் பத்து ஆண்டு களுக்கும் மேலாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் களை விடுவிக்க வேண்டும். தில்லி வன்முறைக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவிவிலக வேண்டும். தில்லி வன்முறையில் உயிரிழந்தவர் களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். சேதப்படுத்தப்பட்ட வீடு கள், சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் தமிழகத்தில் 44 லட்சம் கிறித்த வர்கள், 42 லட்சம் முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வழிபாட்டிற்காக சொந்த இடங்க ளில் சர்ச், ஜெபக்கூடம், மசூதிகள் கட்ட அனுமதி கேட்டால் அனுமதி மறுக்கப்படுகிறது. பட்டா நிலங்க ளில் முறைப்படி வழிபாட்டுத் தலங் கள் அமைக்க விண்ணப்பித்தால் சட்டத்திற்குட்பட்டு குறிப்பிட்ட காலத்திற்குள் தமிழக அரசு அனு மதி வழங்க வேண்டும். சிறு பான்மை நலத்துறையை தனித் துறையாக மாற்ற வேண்டும்.

சிறுபான்மை மக்கள் குவிய லாக வாழும் பல ஊர்களில் இறந்த வர்களை அடக்கம் செய்ய இல்லா மல் சிரமப்படுகின்றனர். சிறு பான்மை மக்களுக்கு இறந்தவர் களை நல்லடக்கம் செய்ய உரிய இடம் ஒதுக்கித்தர வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ச டங்களை ரத்து செய்யவேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி மார்ச் 31-ஆம் தேதி மாவட்ட தலை நகரங்களில் ஒரு நாள் அடை யாள உண்ணாவிரதம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிர்வாகிகள் தேர்வு

தலைவர் எஸ். நூர்முஹமது, பொதுச் செயலாளர் எம். ராம கிருஷ்ணன், பொருளாளர் எம்.அஹமது உசைன். மாநிலத் துணைத் தலைவர்கள் டி. லட்சும ணன், ப.மாரிமுத்து, ஹாஜி. மூசா, என்.நன்மாறன், ஏ.கே. தஷ்ரிப்ஜஹான், ஆர். லீமா றோஸ், என். அமிர்தம், துணைச் செயலாளர்கள் வ.கல்யாணசுந்த ரம், எம்.தாமஸ் சேவியர், ரோட்ரிக் ஜெரோம், அபுபக்கர்,  இஸ்மாயில், கே. அலாவுதீன் உள்ளிட்ட 16 பேர் கொண்ட நிர்வாகக்குழுவும், 66 பேர் கொண்ட மாநிலக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது.