tamilnadu

img

பஞ்சப்பட்டி ஏரி பிரச்சனைக்கு தீர்வு காண்பேன்

திருச்சிராப்பள்ளி, ஏப்.6-

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும்ஐஜேகே கட்சி வேட்பாளர் டாக்டர்பாரிவேந்தர் சனிக்கிழமை கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட விட்டுக்கட்டியில் பிரச்சாரத்தை தொடங்கினார்.பின்னர் லாலப்பேட்டை கடைவீதி, புளவாசிப்பட்டி, சரவணபுரம், வயலூர், கண்ணமுத்தாம்பட்டி, பஞ்சப்பட்டி, தொண்டமாங்கினம், குப்பாண்டியூர் பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் பிரச்சாரம் செய்து வாக்குச் சேகரித்தார். வாக்குச் சேகரிப்பின் போது வேட்பாளர் பாரிவேந்தர் பேசியதாவது:- பஞ்சப்பட்டி ஏரிபிரச்சனைக்கு எனது பல்கலைக்கழக பேராசிரியர்களை அழைத்து வந்து பஞ்சப்பட்டி ஏரியை ஆய்வு செய்து நீர் நிரப்ப உறுதியாக நடவடிக்கை எடுப்பேன்.காவிரி ஆறு தாழ்வான பகுதியிலும்பஞ்சப்பட்டி ஏரி உயர்வான பகுதியில்அமைந்துள்ளது. இதுகுறித்து அரசிடம் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே எங்கள் பல்கலைக்கழகம் அருகில் இருக்கும் ஏரியைஅரசின் அனுமதி பெற்று சீரமைத்துள் ளோம். அது போல இந்த ஏரியையும் நவீன முறையில் சீர்படுத்துவேன் எனபாரிவேந்தர் உறுதி அளித்தார்.வாக்குச் சேகரிப்பில் மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்பட கூட் டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டு வாக்குச் சேகரித்தனர்.

;