tamilnadu

img

ஆளுநர் மாளிகை முன்பு தீக்குளிக்க முயன்றவருக்கு சிறை

சென்னை, செப்.29- சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு தீக்குளிக்க முயன்ற ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல்லை சேர்ந்த வர் முகமது சாகிப். கால்டாக்சி ஓட்டுநர். இவர் கிண்டியில் தங்கி தனியார் கால்டாக்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து காரை ஓட்டி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்திலிருந்து செல்ல பயணி ஒருவர் காரை முன் பதிவு செய்தபோது அதனை ஓட்டுநர் முகமது சாகிப் ரத்து செய்துவிட்டதாக கூறப்படு கிறது. இதையடுத்து முகமது சாகிப்பை கால்டாக்சி நிர்வாகத்தினர் அழைத்து விசாரித்தனர். அப்போது தகராறு ஏற்பட்டது. இதுபற்றி முகமது சாகிப் கிண்டி காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இதே போல் கால்டாக்சி நிர்வாகத்தினரும், முகமது சாகிப் மீது புகார் செய்தனர். இதுபற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், ஓட்டுநர் முகமது சாகிப் கிண்டி யிலுள்ள ஆளுநர் மாளிகை முன்பு தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்கு ளிக்க முயன்றார். இதனை ப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்புக்கு நின்ற காவலர்கள் அவரை மடக்கி பிடித்து தடுத்தனர். பின்னர் முகமது சாகிப்பை மீட்டு கிண்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதற்கிடையே ஆளுநர் மாளிகை முன்பு தற்கொலை க்கு முயன்ற முகமது சாகிப் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்த னர்.

;