tamilnadu

img

கணினி கோளாறால் வேறு நாளில் தேர்வு நடத்தப்படும் : ஆசிரியர் தேர்வு வாரியம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக கணினி ஆசிரியர் தேர்வை எழுத முடியாதவர்களுக்கு வேறு நாளில் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. பல இடங்களில் சர்வர் கோளாறு ஏற்பட்ட நிலையில் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் இவ்வாறு அறிவித்துள்ளார். 
தேர்வு நாள், தேர்வு மையம், குறித்து குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். தேர்வர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.