tamilnadu

img

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தலைக்காய பிரிவு: அமைச்சர்

சென்னை,ஜன.9- சட்டப்பேரவையில் வியாழனன்று நடந்த கேள்வி நேரத்தின்போது துணைக் கேள்வி எழுப்பிய திமுக உறுப்பினர் வரலட்சுமி," செங்கற்பட்டு மாவட்டம் செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதால் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள தலைக்காயப் பிரிவு இந்த ஆண்டாவது துவக்கப்படுமா? என்றார். இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,"சென்னைக்கு மிக அருகாமையில் உள்ள குரோம்பேட்டை அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு தலைக்காய பிரிவு துவக்கப்பட்டு உள்ளது  என்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் மிக விரைவில் தலைக்காயப் பிரிவு அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடு களும் நடந்து வருகிறது என்றும் கூறினார்.

;