tamilnadu

img

பிராய்லர் கோழி: அமைச்சர் எச்சரிக்கை

சென்னை,நவ.27- பிராய்லர் கோழியை விரைவாக வளர்ச்சியடையச் செய்வதற்காக தடை செய்யப் பட்ட மருந்துகளை பயன் படுத்தினால் கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரி வித்துள்ளார். சென்னை நந்தனத்தில் உள்ள கால்நடை பராமரிப்பு துறை அலுவலகத்தில் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தலைமை யில் துறையின் செயல்பாடு கள் குறித்து, அனைத்து  மண்டல இணை இயக்கு நர்கள் கலந்துகொண்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற் றது. பின்னர் அமைச்சர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், பசுக்களுக்கு தீவனம் அளிக்கும் போது பூசனம் படர்ந்திருக்கிறதா என்பதை விவசாயிகள் கவனிக்க வேண்டும் என்று அறி வுறுத்தினார். பிராய்லர் கோழியை விரைவாக வளர்ச்  சியடையச் செய்வதற்காக தடை செய்யப்பட்ட மருந்து களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று எச்சரித்தார்.