சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. அதில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் அகரத்தில் நடைபெற்ற பணியின் போது 5 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிக்க பட்டு உள்ளன. இதன் ஒரு உறை முக்கால் அடி உயரமும் இரண்டு அறை அடி அகலமும் கொண்டு உள்ளது. மொத்தம் 5 உறைகள் கொண்ட கிணறு கண்டு பிடிக்கபட்டு உள்ளது. ஏற்கனவே அகரத்தில் சிறிய பனைகள், நத்தை ஓடுகள், சங்கு வளையல்கள், தங்க நாணயங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கபட்டுள்ளது. இந்தபகுதி மக்கள் வசிப்பிடமாக இருந்து வந்ததாகவும் அதன அடிப்படையில் அகரத்தில் பணிகள் மேற் கொண்டு வருகின்றனர். தண்ணீரை எவ்வாறு சேமித்து வைத்து எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என பழங்காலத்தில் சிந்தித்து உள்ளனர்.
தொடர்ந்து அகழாய்வு நடைபெறும் கீழடி பகுதியில் விலங்கின் எழும்பு கூடுகள், கட்டிட சுவர்கள், சிறிய பெரிய பனைகள், கழிவு நீர் வாய்கால்கள், இரும்பு உலைகள் ஆகியவை கண்டுபிடிக்கபட்டுள்ளன. இதே போல் கொந்தகை அகழாய்வில் மனித எலும்பு கூடுகள், முதுமக்கள் தாழிக்கள், குழந்தையின் முழு எலும்புகள் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இதே மணலூரில் சுடுமண் உலை, சிறிய மற்றும் பெரிய எலும்புகள் கண்டுபிடிக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நான்கு இடங்களிலும் தொடர்ந்து அகழாய்வில் வியக்கத்தக்க பொருட்கள், பழங்கால மக்கள் வாழந்த நகர, நாகரிகம், பயன்படுத்தி பொருட்கள், விவசாயத்தில் அப்போதே சிறந்த விளங்கிய ஆதாரங்கள கிடைத்து வருவதால் பழங்கால தமிழரின் வாழ்க்கை உலகத்திற்கே எடுத்துகாட்டாக விளஙகி வருகின்றது.