நூல் வெளியீட்டு விழாவில் நீதிபதி ஆர்.மகாதேவன் புகழாரம்
மன்னார்குடி, டிச.19- தெற்காசிய வரலாற்றின் மாபெரும் அறிஞர் பாலகிருஷ்ணன் என்று நீதிபதி ஆ.மகாதேவன் புகழ்ந்துரைத்தார். ஒடிசா மாநில அரசின் ஆலோசக ரும் சிந்துவெளி பண்பாட்டு ஆய்வா ளருமான ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எழுதிய “ஜர்னி ஆஃப் ஏ சிவிலை சேஷன்: இண்டஸ் டு வைகை”(ஒரு நாகரிகத்தின் பயணம்: சிந்துவெளி முதல் வைகை வரை ) என்ற ஆங்கில நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடந்தது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன் நூலை வெளியிட, பத்திரிகையாளர் டோனிஜோசப் பெற்றுக் கொண்டார். விழாவில் நீதிபதி ஆர்.மகா தேவன் பேசியதாவது: சிந்துவெளி நாக ரிகத்துக்கும் திராவிடப் பண்பாட்டுக்கும் இருக்கும் தொடர்பை இந்நூல் தரவுப் பூர்வமாக விவரிக்கிறது. இதில் முன்வை க்கப்படும் இந்திய பண்பாட்டுக்கான வரையறை வடஇந்திய, தென்னிந்தியர்கள் இடையிலான முரண்பாடுகளைக் களையக் கூடும். தெற்காசிய வரலாற்றின் மாபெரும் அறிஞர் பாலகிருஷ்ணன் என்பதை அவரது நூல்கள் நிரூபிக்கின்றன. திராவிடப் பண்பாட்டுக்கும் சிந்து வெளி நாகரிகத்துக்கும் இடையிலான தொடர்பு குறித்த நமது புரிதலை இந்த நூல் மாற்றி அமைக்கும் என்று டோனி ஜோசப் கூறினார்.
தமிழக தொல்லியல் துறை ஆணை யர் த.உதயச்சந்திரன் பேசும்போது, இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் இருக்கும் ஊர்களுக்கு தமிழ்ப் பெயர்கள் இருப்பது சிந்துவெளியில் முதன்மையாக இருந்த தாய் தெய்வ வழிபாடு தமிழகத்தின் ஆதிச்சநல்லூர் வரை தொடர்வது என சிந்துவெளி நாக ரிகம் குறித்த பல புதிர்களை இந்நூல் விடுவிக்கிறது என்று கூறினார். ஏற்புரை ஆற்றிய ஆர்.பால கிருஷ்ணன், 31 ஆண்டு கால ஆராய்ச்சிக்கு பிறகு இந்த நூலை எழுதி யுள்ளேன். தமிழர் வரலாறு தொடர்பான புதிர்களும் சிந்துவெளி தொடர்பான புதிர்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. மற்றும் ஒரே நாண யத்தின் இரு பக்கங்கள் என்பதை இந்த நூலில் நிறுவியிருக்கிறேன் என்று கூறினார். முன்னதாக இந்நூலை பதிப்பித்துள்ள ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தின் இயக்குநர் சுந்தர் கணேஷ் வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணை யர் என்.கோபால்சுவாமி மைண்ட் ட்ரீ நிறுவனத்தின் நிறுவனர் சுப்ரதோ பக்சி, புதுச்சேரி பல்கலைக்கழக வர லாற்றுத் துறை பேராசிரியர் கே.ராஜன், கேரள வரலாற்று ஆய்வாளர் பி.ஜெ. செரியன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.