மத்திய பாஜக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
சென்னை, ஜூலை 24- இடஒதுக்கீடுபெறாத பொருளா தாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு குறைவான கட்-ஆப் மதிப்பெண் தீர்மானித்து ஸ்டேட் வங்கி தேர்வுக்கு கடிதம் அனுப்பியிருப்பது கடைந் தெடுத்த அநீதியாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரி வித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி யில் ஜூனியர் அசோசியேட்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று இறுதிக்கட்ட தேர்வு எழுதுவதற்கு வங்கி நிர்வாகம் கட் ஆப் மதிப்பெண்கள் தீர்மானித்து தேர்வு எழுதியவர்களுக்கு கடிதம் அனுப்பி யுள்ளது. நடைபெறவுள்ள அகில இந்திய போட்டித் தேர்வில் தமிழகத்தில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு 61.75, பட்டிய லினத்தவருக்கு 61.25, பழங்குடி யினத்தவருக்கு 53.75 கட் ஆப் மதிப்பெண்கள் தீர்மானித்துள்ள எஸ்பிஐ வங்கி நிர்வாகம், இடஒதுக்கீடு பெறாத பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு வெறும் 28.5 கட் ஆப் மதிப்பெண் தீர்மானித்துள்ளது கடைந் தெடுத்த அநீதியாகும். இதர பிற்படுத்தப் பட்டவர் (ஓபிசி), பட்டியலினத்தவர் (எஸ்சி) மற்றும் பழங்குடியினர்களை (எஸ்டி) விட அதிகமான கட் ஆப் மதிப்பெண்களையே இவர்களுக்கு தீர்மானித்திருக்க வேண்டும். அதை விடுத்து இப்பிரிவினருக்கு குறைவான மதிப்பெண்கள் தீர்மானித்திருப்பது இவர்களுக்கு அதிக வாய்ப்பளிப்ப தற்கான உள்நோக்கம் கொண்டதாகும்.
பொதுவாக மத்திய அரசு நிறு வனங்களில் இடஒதுக்கீட்டு கோட்பாட்டி னை அமலாக்குவதில் தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. தகுதி அடிப்படையில் கூடுதல் மதிப்பெண்கள் பெற்ற எஸ்சி/எஸ்டி, ஓபிசி வகுப்பைச் சார்ந்தவர்களை பொதுப்பிரிவில் இடமளிக்க வேண்டும். ஆனால், இவர்களை எஸ்சி/எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீடு பட்டியலில் இடமளிப்ப தால் இவ்வகுப்பைச் சார்ந்த பயனா ளிகள் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. இது எஸ்சி/எஸ்டி, ஓபிசி வகுப்பை சார்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் பணியில் சேருகிற வாய்ப்பை தட்டிப்பறிப்பதாகும். மேலும் எஸ்சி/எஸ்டி, ஓபிசி வகுப் பினர்க்கு கட் ஆப் மதிப்பெண் தீர்மானித்து போதுமான எண்ணிக்கை யில் பயனாளிகள் கிடைக்காத நிலை யில், அந்த இடங்களில் இவ்வகுப்பி னரையே சேர்க்கும் வகையில் கட் ஆப் மதிப்பெண்ணை குறைக்க வேண்டு மென தொடர்ந்து வற்புறுத்தியும் மத்திய அரசு அதை நிறைவேற்றுவதில்லை. மாறாக, அந்த காலியிடங்களை பொதுப்பிரிவினரைக் கொண்டு நிரப்பும் மோசமான அணுகுமுறையையே கடைபிடித்து வருகிறது.
இதன் ஒருபகுதியாகவே, இட ஒதுக்கீடு பெறாத பொருளாதாரத்தில் நலிந்தோருக்கான கட் ஆப் மதிப் பெண்ணை குறைத்து தீர்மானித்துள்ளது. வங்கி நிர்வாகத்தின் இந்த போக்கை வன்மையாகக் கண்டிப்பதோடு, இத்தகைய பாரபட்ச போக்கினை களைந்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடசியின் மாநில செயற்குழு மத்திய அரசை வற்புறுத்துகிறது. மத்திய அரசு நிறுவனங்களில் தகுதி அடிப்படையில் தேர்வாகும் பயனாளிகளை பொதுப்பிரிவில் பணியமர்த்தவும், எஸ்சி/எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு முழுமையாக இப்பிரிவு பயனாளிகளைக் கொண்டே பூர்த்தி செய்வதற்கும் தேவையான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டுமென வலி யுறுத்துகிறோம். மேலும், ஏற்கனவே மத்திய அரசு நிறுவனங்களில் காலியாக உள்ள பணிகளை (யெஉமடடிப) எஸ்சி/எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு காலியாக உள்ள பணிகளை இப்பிரிவு பயனாளிகளைக் கொண்டே பூர்த்தி செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம். மேலும் இடஒதுக்கீடு பெறாத பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு தீர்மானிக்கப்பட்ட ரூ. 8 லட்சம் என்ற வருமான வரம்பை குறைக்காமல் இந்த இடஒதுக்கீட்டை மத்திய அரசு நிறுவனங்களில் அமலாக்கு வதால் உண்மையான ஏழைகளுக்கு இச்சலுகை கிடைக்க வாய்ப்பில்லை என்பதையும் சுட்டிக்காட்டுவதோடு, ஆண்டு வருமான வரம்பை குறைக்க வேண்டுமெனவும் வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.