tamilnadu

img

தமிழகத்தில் ஒரே நாளில் 30 பேர் பலி

சென்னை, ஜூன் 13- நாட்டின் அதிக பரவல் கொரோனா மையங்களில் ஒன்றாக உள்ள தமி ழகத்தில் பரவல் வேகம் உச்சத்தில் உள்ளது. கடந்த ஒருவார காலமாக தினமும் 1800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவதால் மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில்  1989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 42,687 ஆக அதி கரித்துள்ளது. மேலும் வியாழன் ஒரே நாளில்  இதுவரை இல்லாத அளவிற்கு 30 பேர்  பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 397 ஆக அதிகரித் துள்ளது. அதிகபட்சமாக சென் னையில் 1487 பேர் பாதிக்கப்பட் டுள்ள நிலையில், அங்கு மொத்த பாதிப்பு 30,444 ஆக உயர்ந்துள் ளது. 

;