சென்னை, ஜூலை 15- 2019-2020 ஆண்டின் குடிமராமத்து பணிக்காக 1,829 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக உறுப்பினர் கே.என்.நேரு, “தமிழகம் முழுவதும் பொதுப்பணித் துறைக்கு சொந்தமாக 30 ஆயிரத்திற்கும் அதிமான ஏரிகள் உள்ளது. மாநிலம் முழுமைக்கும் நிலத்தடி நீர் குறைந்துள்ளதால் குடிமராமத்து பணிக்காக மத்திய அரசிடமிருந்து நிதி அதிகம் பெற கூடு தல் கவனம் செலுத்த வேண்டும். கிராமத் தலை வர்கள் மற்றும் அங்குள்ள விவசாயிகளை வைத்து குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர், “நிலத்தடி நீரை பாதுகாக்க கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. நீர் மேலாண்மைக்காக தனி அமைப்பு உருவாக்கப்பட்டு அதனை கண்காணிக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரி பாலாஜி நியமிக்கப்பட்டிருக்கிறார்” என்றார். 85 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை ரூ. 100 கோடி மதிப்பில் தூர்வாரப்பட்டுள்ளது. குடிமரா மத்து பணியை மேலும் விரிவுபடுத்தப்பட்டு ரூ. 500 கோடி மதிப்பீட்டில் 829 ஏரிகளில் பணிகள் நடைபெறும் என்றும் முதலமைச்சர் கூறினார். அப்போது குறுக்கிட்ட துரைமுருகன், “குடிமராமத்து பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் பட்டியல் குறித்து அந்தந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களிடம் கருத்து கேட்க வேண்டும்” என்றார். இதற்கு விளக்கம் அளித்த முதல்வர்,“ குடி மராமத்து பணியில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது. விவசாயிகளின் முழு பங்களிப்புடன் நடக்க வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். வேண்டும் என்றால் மராமத்து பணிகள் நடக்கும் ஏரிகள் குறித்த பட்டியல் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்ப டும்” என்றார்.