இந்தோனேசியா நாட்டின் தலைமை பாதுகாப்பு மந்திரி மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியா நாட்டின் தலைமை பாதுகாப்பு மந்திரியாக விரண்டா இருந்து வருகிறார். அவர் சமீபத்தில், அந்நாட்டின் பண்டென் மாகாணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். இந்நிகழ்ச்சியில் அவரை வரவேற்க ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். அப்போது கூட்டத்தில் நின்று கொண்டிருந்த இரு மர்ம நபர்கள், திடீரென மந்திரியை கத்தியால் குத்தினர். இதை தடுக்க சென்ற பாதுகாவலரும் தாக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இதில் தாக்கப்பட்ட விரண்டா மற்றும் பாதுகாவலர் ஆகிய இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு மர்ம நபர்களையும் போலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.