இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் தென் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை பெய்தது. இதனால், ஜகர்த்தா உள்ளிட்ட நகரங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுமார் 200க்கும் அதிகமான குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணிகளில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.