இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் குழந்தைகள் உள்பட 30 பேர் பலியாகி உள்ளனர்.
இந்தோனேசியாவின் வடக்கு சுமந்திரா பகுதியில் உள்ள பின்ஜின் நகரில் தீப்பெட்டி தொழிற்சாலையில் இன்று வழக்கம்போல் தயாரிப்பு பணிகள் நடைபெற்றுவந்த நிலையில் திடீரென்று வெடி சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது. இதில் குழந்தைகள் உட்பட 30 பேர் பலியாகி உள்ளதாக
இந்த விபத்திற்கான காரணம் இதுவரை தெரியாததால், போலீசார் விசாரணை நடந்து வருகின்றனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.