tamilnadu

img

காலத்தை வென்றவர்கள்... மார்ச் 1

கே.பி.ஜானகியம்மாள் நினைவு நாள்

அந்தக் காலத்தில் மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சி ஊர் வலங்கள் டவுன்ஹால் அருகிலிருந்துதான் புறப்படும். கிராமங் களிலிருந்து ஏராளமான மக்கள் வருவார்கள். ஊர்வலம் துவங்குவதற்கு முன்பு ஒரு பெண்தோழர் அங்கே வருவார். ஒவ்வொரு கிராமத்துப்பெயரை சொல்லி எவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள் என்று தோழர்களிடம் கேட்பார். ஏதாவது கிராமத்திலிருந்து தோழர்கள் வரவில்லையென்றால் ஏன் வரவில்லை என்று கவலையுடன் விசாரிப்பார். இதுதான் தோழர் கே.பி.ஜானகியம்மாள்.

மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஏழை, எளிய மக்களுக்கு சிறு பிரச்சனை என்றாலும் உடனே கிளம்பிவிடுவார். ஒரு கைப்பை, அதற்குள் சிறிய குடை, அதுதான் அவர் சொத்து. 1917ல் மதுரையில் பிறந்த ஜானகியம்மாள்  எட்டாம் வகுப்போடு பள்ளியை விட்டு வெளியேறி நாடகக் கம் பெனியில் சேர்ந்து நடிப்புக் கலைஞரானார். அதே குழுவில் இசையமைப்பாளராக இருந்த குருசாமியை மணந்தார். 1936ஆம் ஆண்டில் காங்கிரசில் சேர்ந்தவர், பின்னர் அதே ஆண்டில் சோசலிஸ்ட் கட்சியிலும், 1940ல் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியிலும் இணைந்து களப்போராளி ஆனார். மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி உதய மானபோது, அதில் பல பொறுப்புகளை வகித்தார். போராட்டங்களை நடத்தி பல ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளார். 1967ஆம் ஆண்டில் மதுரை(கிழக்கு) தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்குச் சென்றார். பொதுவுடைமை தத்துவத்தால் ஈர்க்கப்பட்டு வசதியான வாழ்க்கையைத் துறந்து தனது கணவருடன் இறுதிக்காலம் வரை தியாக வாழ்க்கை வாழ்ந்தார். சி.பி.எம்.மில் விவசாய சங்கத்தையும், மாதர் சங்கத்தையும் உருவாக்கி வளர்த்ததில் இவ ருடைய பங்கு அலாதியானது. இவர் உயிரோடு இருந்த காலத்திலேயே இவரின் சுயசரிதை ‚ ஒரு அம்மாவின் கதை ‚ என்ற பெயரில் வெளியானது. இவரது அர்ப் பணிப்பு மிக்க வாழ்க்கை பெண் போராளி களுக்கு முன்மாதிரி எனின் மிகையன்று.

பெரணமல்லூர் சேகரன்