tamilnadu

img

காலத்தை வென்றவர்கள்: தோழர் எவ்லின் டிரெண்ட் பிறந்தநாள்...

தோழர் எவ்லின் டிரெண்ட் 1892ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் நாளில் பிறந்தவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் அமைப்பாளரான தோழர் எம்.என்.ராயின் மனைவி ஆவார். தாஷ்கண்ட் நகரில் அமைக்கப்பட்ட முதல் கட்சிக்கிளையின் உறுப்பினருமாவார்.மெக்சிகோவிலிருந்து ரஷ்யா வரை சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்திற்காகப் பணியாற்றினார்.இந்திய கம்யூனிஸ்ட் அறிக்கை, இந்திய தேசிய நெருக்கடி, சீக்கியப் புரட்சி, காந்தியிஸம், பம்பாய் வேலைநிறுத்தம், ரஷ்யப் புரட்சி, மத்திய ஆசியப் புரட்சி போன்ற பல நூல்களை எழுதியவர் எவ்லின் டிரெண்ட்.1963ல் எவ்லின் வீடு எரிந்ததில் அவரது அனைத்து ஆவணங்களும் எரிந்து போயின. 1970ஆம் ஆண்டு நவம்பர் 21ல் அவர் காலமானார்.

===பெரணமல்லூர் சேகரன்====

;