1789 பிரெஞ் சுப் புரட்சியின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான வெர் செய்ல்ஸ் நோக்கிய பெண்கள் பேரணி தொடங்கியது. பாரிஸ் நகரின் சந்தைப் பகுதிகளில் ரொட்டி தட்டுப்பாடு, ரொட்டியின் மிகஅதிக விலை ஆகிய வற்றுக்கெதிராக, போராடத்தொடங்கிய பெண்கள், அரசர் பதினாறாம் லூயி-யின் இருப்பிடமான வெர்செய்ல்ஸ் அரண்மனைக்குப் பேரணியாகச்சென்றனர். பசியாலும், நம்பிக்கையின்மையாலும் துவண்டிருந்த மக்கள், ரொட்டியைத் தேடித்தான் முதலில் போராடத் தொடங்கினார்கள். ஹோட்டல்-டி-வில்லி திறந்துவிடப்பட்டு, போதுமான ரொட்டி அவர்களுக்குக் கிடைத்தாலும்கூட, அடுத்த வேளைக்கு போதுமான அளவு ரொட்டி கிடைக்குமா, அதுவும் நியாயமான விலையில் என்ற நம்பிக்கையின்மையே பெரும் போராட்டத்தை உருவாக்கியது. பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருந்த கீழ்த்தட்டு மக்களை, ‘உயர்குடியினரின் சதி’ என்ற வதந்தியும் அச்சத்திற்குள்ளாக்கியிருந்தது. விவ சாயம் உள்ளிட்ட உற்பத்திப் பொருட்களின் விலையை நிர்ணயித்து, சந்தைப்படுத்த, கில்ட் என்னும் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் 13ஆம் நூற்றாண்டிலிருந்தே பிரான்சில் இருந்தன. விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக என்று கூறிக்கொண்டு, 1773இல் இந்த கில்ட் முறை ரத்து செய்யப்பட்டு, திறந்த சந்தை முறை அறிமுகப்படுத்தப் பட்டது. இதனால், உணவு தானியங்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்ததை எதிர்த்து, 1775 ஏப்ரல்-மே-யில் நடைபெற்ற கலகங்கள் ‘மாவுப் போர்’ என்று அழைக்கப்படுகின்றன. அவற்றால், 1775இல் கில்ட் முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், புதிய கில்ட் முறையை காவல்துறையால் சரியாக நிர்வகிக்க முடிய வில்லை. அக்காலத்தில், பிரான்சின் காவல்துறை, பாது காப்புப் பணிகளை மட்டுமின்றி, தெருக் கூட்டுதலி லிருந்து, அரசுத் துறைகளின் நிர்வாகம்வரை கவனித்துக் கொண்டிருந்தது! இவற்றால் ஏற்பட்டிருந்த தட்டுப்பாடு, கீழ்த்தட்டு மக்களை ஒடுக்குவதற்காக, உயர்குடியினரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாக நம்பப்பட்டதே ‘உயர்குடியினரின் சதி’ என்று குறிப்பிடப்படுகிறது. சந்தைகளில் திரண்ட பெண்களுடன், ஆண்களும் சேர்ந்து கொள்ள, ஆயிரக்கணக்கானோர் நகரின் ஆயுதக்கிடங்கி லிருந்த ஆயுதங்களைக் கைப்பற்றி, பீரங்கிகளை இழுத்துக் கொண்டு, 6 மணி நேரம் நடந்து, சுமார் 20 கி.மீ. தொலைவி லிருந்த வெர்செய்ல்ஸ் அரண்மனையை அடைந்தனர். வெர்செய்ல்ஸ் அரண்மனை தான் அரசரின் அதிகாரப்பூர்வ இருப்பிடமாக இருந்தாலும், பாரீசில் இருந்தால்தான் மக்களின் பிரச்சனைகளை அறிந்து செயல்பட முடியும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அரண்மனை யின் பாதுகாவலர்களுடன் மோதலில் ஈடுபட்டு, மறுநாள் உள்ளே நுழைந்த மக்கள், அரசர், அரசி, அவையோரைச் சூழ்ந்து, பாரீசின் டூய்லரிஸ் அரண்மனைக்கு அழைத்து (இழுத்து?!) வந்துவிட்டனர்! இந்நிகழ்வே, அரசியல்சட்ட முடி யாட்சிக்கு எதிரான அரசரின் நிலையைக் கைவிடச்செய்தது.