tamilnadu

img

2ம் உலகப்போரில் வீசப்பட்ட குண்டு செயல் இழக்கச் செய்தபோது வெடித்ததால் பதற்றம்

போலந்தில் இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட குண்டை செயல் இழக்கச் செய்ய முயன்றபோது வெடித்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 
உலக நாடுகளுக்கு இடையே 1939 முதல் 1945 வரை இரண்டாம் உலகப்போர் நடைபெற்றது. அப்போரில் தான் உலகில் முதல் முறையாக அணுஆயுதம் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் அவ்வப்போது இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள்கண்டறிப்பட்டு வருகிறது. இதில் பல குண்டுகள் செயல் இழந்த நிலையில் உள்ளன. சில குண்டுகள் வெடிக்கக்கூடிய நிலையிலேயே தற்போது வரை உள்ளது. அதுபோல் போலந்து நாட்டின் பயாஸ்ட் கால்வாயில் 1945ம் ஆண்டு பிரிட்டன் வீசிய டால்பாய் வெடிகுண்டு கண்டறியப்பட்டது. அதன் எடை 5 ஆயிரத்து 400 கிலோ என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த குண்டை செயல் இழக்கச் செய்யும் பணியில் போலந்து கடற்படையினர் ஈடுபட்டனர். ஆனால் எதிர்பாராத விதமாக குண்டு வெடித்தது. இதனால் கடல் நீர் நீண்ட உயரத்திற்கு மேல் எழுந்தது. நீருக்கடியில் வெடித்ததால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.